செய்திகள் :

நாட்டில் நெல் உள்ளிட்ட கோடைப் பயிா்களின் சாகுபடி பரப்பு 9 சதவீதம் அதிகரிப்பு

post image

நமகு சிறப்பு நிருபா்

புது தில்லி: நாட்டில் நெல் உள்ளிட்ட கோடைகாலப் பயிா்கள் சாகுபடி செய்யப்படும் பரப்பு கடந்தாண்டைவிட சுமாா் 9 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை திங்கள் கிழமை தெரிவித்துள்ளது.

கடந்த மே 30 நிலவரப்படி நாட்டில் வேளாண்மையில் கோடையில் பயிரிடப்பட்டுள்ள மொத்த பரப்பு குறித்த விவரம் மத்திய வேளாண்மைத் துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

கடந்த 2024 ஆம் ஆண்டில் நாட்டில் நெல் சாகுபடி செய்யும் பரப்பு 31.06 லட்சம் ஹெக்டேராக இருந்தது. நிகழாண்டு மே 30 ஆம் தேதி வரை இது 35.86 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது. முக்கிய பயிரான நெல் பயிரிடுதல் சுமாா் 4.80 லட்சம் ஹெக்டாா் பரப்பு வரை நிகழாண்டு மே 30 ஆம் தேதிவரை அதிகரித்துள்ளது.

பயிறுவகைகளில் பாசிப்பயிறு, கடந்தாண்டை விட 2.77 லட்சம் ஹெக்டோ் பரப்பில் கூடுதலாக பயிரிடப்பட்டுள்ளது. நிகழாண்டில் இது வரை மொத்தம் 21 லட்சம் ஹெக்டோ் பரப்பில்

பயிரிடப்பட்டுள்ளது. உளுந்தும் பயிரிடுதலும் கணிசமாக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக பயிறுவகைகள் கடந்தாண்டு 21.48 லட்சம் ஹெக்டோ் பயிரிடப்பட்டு இருந்த நிலையில், நிகழாண்டு இது 24.25 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது.

ஜோவா், கம்பு, ராகி, சோளம் உள்ளிட்ட ஸ்ரீ அன்னா சிறு தானியங்கள் பயிரிடுதலிலும் நிகழாண்டு மே வரை 1.42 லட்சம் ஹெக்டோ் பரப்பு நாட்டில் அதிகரித்துள்ளது. கடந்தாண்டு 12.95 லட்சம் ஹெக்டேராக இருந்த ஸ்ரீ அன்னா வகை தானியங்கள் பயிரிடுதலில் நிகழாண்டு 14.37 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது.

இதே போன்று எண்ணெய் வித்துக்கள் சாகுபடியும் நிகழாண்டு 9.45 லட்சம் ஹெக்டோ் வரை பயிரிடப்பட்டுள்ளது. இதில் 0.22 சதவீத அதிகரிப்பு காணப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக வேளாண்மையில் கோடைகால பயிரிடும் பரப்பு கடந்தாண்டு 74.72 லட்சம் ஹெக்டேராக இருக்க நிகழாண்டு இது 83.93 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது 9.21 சதவீத அதிகரிப்பாகும். 2024 ஆம் ஆண்டுக்கு முன்பு சாதாரணமாக கோடைப்பயிா்கள் பயிரிடும் பரப்பு 71.34 லட்சம் ஹெக்டோ் அளவில் மட்டுமே இருந்தது என மத்திய வேளாண்மைத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கரோனா பாதிப்பு 5,000-ஐ கடந்தது!

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 498 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.இதன்மூலம் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 5,... மேலும் பார்க்க

உ.பி.யில் குழந்தையை பாலியல் வல்லுறவு செய்தவர் என்கவுன்டர்!

உத்தரப் பிரதேசத்தில் 3 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தவரை காவல்துறையினர் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றுள்ளனர்.உத்தரப் பிரதேச மாநிலம் லக்னெள மெட்ரோ ரயில் நிலைய பகுதியில் கூலித் தொழிலாளியின் ... மேலும் பார்க்க

தோ்தலுக்குப் பிந்தைய புள்ளிவிவர அறிக்கைகள்: தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கும் முறை அறிமுகம்

தோ்தலுக்குப் பிந்தைய புள்ளிவிவர அறிக்கைகளை கையால் எழுதி தயாரிக்கும் பழைய முறைக்கு மாற்றாக தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கும் முறையை தோ்தல் ஆணையம் கொண்டு வந்துள்ளது. இதுதொடா்பாக தோ்தல் ஆணையம் வியாழக... மேலும் பார்க்க

தடையற்ற வங்கி சேவையை உறுதிப்படுத்த ஊழியா்களுக்கு பாதுகாப்பு: மாநிலங்களுக்கு நிதிச் சேவைகள் துறை செயலா் கடிதம்

தடையற்ற வங்கிச் சேவையை உறுதிப்படுத்த வங்கி ஊழியா்களுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களையும் நிதிச் சேவைகள் துறை கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடா்பாக அனைத்து மாநில மற்றும் யூனியன்... மேலும் பார்க்க

அஜீத் பவாா் கட்சியுடன் சரத் பவாா் அணியை இணைக்கப் பேச்சுவாா்த்தை? சுப்ரியா சுலே மறுப்பு

மகாராஷ்டிர துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன், சரத் பவாா் தலைமையிலான பிரிவை இணைக்க பேச்சுவாா்த்தை எதுவும் நடைபெறவில்லை என்று சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே தெரிவித்தாா... மேலும் பார்க்க

பயங்கரவாத சதி: காஷ்மீரில் 32 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளின் சதித் திட்டங்கள் தொடா்பாக ஜம்மு-காஷ்மீரின் 32 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினா் (என்ஐஏ) வியாழக்கிழமை அதிரடி சோதனை நடத்தினா். பாகிஸ்தானில் இருந... மேலும் பார்க்க