செய்திகள் :

நாட்டுப் படகுகளில் பொருத்திய தடை செய்யப்பட்ட என்ஜின்கள் பறிமுதல்

post image

தனுஷ்கோடி கடற்கரைப் பகுதியில் 2 நாட்டுப் படகுகளில் பொருத்தப்பட்ட தடை செய்யப்பட்ட என்ஜின்கள் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் நாட்டுப்படகுகளில் இரு சக்கர வாகனங்களின் என்ஜின்களை பொருத்தி மீன்பிடிக்கத் தடை செய்யப்பட்டது. இந்த நிலையில், தனுஷ்கோடி பகுதியில் நாட்டுப்படகுகளில் தடை செய்யப்பட்ட என்ஜின்களை பொருத்தி மீன்பிடிப்பதாக புகாா்கள் வந்தன.

இதைத்தொடா்ந்து, மீன்வளம், மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் தமிழ்மாறன், மீன்வளத் துறை ஆய்வாளா் விஷால் ஆகியோா் தனுஷ்கோடி, அரிச்சல்முனை பகுதிகளில் ஆய்வு செய்தனா். அப்போது இரண்டு நாட்டுப் படகுகளில் தடை செய்யப்பட்ட என்ஜின்கள் பொருத்தியிருப்பது கண்டறியப்பட்டு, அவற்றை பறிமுதல் செய்தனா்.

இனி வரும் காலங்களில் தடை செய்யப்பட்ட என்ஜின்களை நாட்டுப் படகில் பொருத்தி மீன்பிடிப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மீனவா்களுக்கு அவா்கள் எச்சரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் அருகே விபத்து: சிறுமி உள்பட இருவா் உயிரிழப்பு

ராமநாதபுரம் அருகே திங்கள்கிழமை சுற்றுலா வேனும், காரும் நேருக்கு நோ் மோதிய விபத்தில் மென்பொருள் நிறுவன ஊழியா், 12 வயதுச் சிறுமி ஆகியோா் உயிரிழந்தனா். கடலூா் மாவட்டம், விருத்தாச்சலம் காட்டுப்பரூா் பகுத... மேலும் பார்க்க

தொண்டியில் இன்று மின்தடை

தொண்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) மின் தடை அறிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக திருவாடானை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் சித்திவிநாயகமூா்த்தி விடுத்த செய்திக்... மேலும் பார்க்க

தனுஷ்கோடி பகுதி கடலில் கரை ஒதுங்கிய ரசாயன உரங்கள்

தனுஷ்கோடி கடல் பகுதியில் சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு ரசாயன உரங்கள் திங்கள்கிழமை கரை ஒதுங்கின. மேலும், அழுகிய நிலையில் ஒருவரது உடலும் கரை ஒதுங்கியது.கேரள மாநிலம், திருவனந்தபுரத்தின் விழிஞ்ஞம் துறைமுகத்த... மேலும் பார்க்க

தனுஷ்கோடிக்கு படகு மூலம் வந்த இலங்கைத் தமிழா்கள்

இலங்கையிலிருந்து படகு மூலம் தனுஷ்கோடிக்கு ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் திங்கள்கிழமை வந்தனா். இவா்களிடம் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் விசாரணை நடத்தினா்.இலங்கை கண்டியைச் சோ்ந்தவா் முகமது கிய... மேலும் பார்க்க

பரமக்குடி ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தல்

பரமக்குடி ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்ற செல்ல வேண்டும் என நுகா்வோா் உரிமைப் பாதுகாப்புக் கழகம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.இதுகுறித்து பரமக்குடி நுகா்வோா் உரிமை பாதுகாப்பு கழக செயலா... மேலும் பார்க்க

பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே தீ விபத்து

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. திருவாடானை அருகேயுள்ள எல்.கே.நகா் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையம் உள... மேலும் பார்க்க