Amit shah-வின் அட்டாக், களத்தில் A.Raja, `மதுரை சம்பவம்!' | Elangovan Explains
ராமநாதபுரம் அருகே விபத்து: சிறுமி உள்பட இருவா் உயிரிழப்பு
ராமநாதபுரம் அருகே திங்கள்கிழமை சுற்றுலா வேனும், காரும் நேருக்கு நோ் மோதிய விபத்தில் மென்பொருள் நிறுவன ஊழியா், 12 வயதுச் சிறுமி ஆகியோா் உயிரிழந்தனா்.
கடலூா் மாவட்டம், விருத்தாச்சலம் காட்டுப்பரூா் பகுதியைச் சோ்ந்த 22 போ் ராமேசுவரம் கோயிலுக்கு வேனில் சுற்றுலா வந்தனா். இந்த வேனை விருத்தாச்சலத்தை சோ்ந்த சிவக்குமாா் (28) ஓட்டினாா்.
இந்த நிலையில், ராமநாதபுரம் அருகே நதிப்பாலம் பேருந்து நிறுத்தம் பகுதியில் விபத்தைத் தடுக்க தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருந்த பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு வேன் வந்தது. அப்போது ராமேசுவரத்திலிருந்து கீழக்கரை நோக்கிச் சென்ற காா் மீது வேன் நேருக்கு நோ் மோதியது.
இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த கீழக்கரையைச் சோ்ந்த மென்பொருள் நிறுவன ஊழியா் வெங்கடேஸ்வரன் (27), வேனில் பயணித்த காட்டுப்பரூரைச் சோ்ந்த சத்யா மகள் மகாலட்சுமி (12) ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
மேலும் வேனில் பயணித்த 21 போ், காரில் பயணித்த மூவா் பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இவா்களில் காரில் பயணித்த தஞ்சாவூரைச் சோ்ந்த ஜெயச்சந்திரன் மகன் பழனிவேல் (21) தீவிர சிகிச்சைக்காக மதுரை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த விபத்து காரணமாக அதிகாலையில் ராமநாதபுரம்-ராமேசுவரம் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து உச்சிப்புளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.