Amit shah-வின் அட்டாக், களத்தில் A.Raja, `மதுரை சம்பவம்!' | Elangovan Explains
நாட்டுப் படகுகளில் பொருத்திய தடை செய்யப்பட்ட என்ஜின்கள் பறிமுதல்
தனுஷ்கோடி கடற்கரைப் பகுதியில் 2 நாட்டுப் படகுகளில் பொருத்தப்பட்ட தடை செய்யப்பட்ட என்ஜின்கள் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் நாட்டுப்படகுகளில் இரு சக்கர வாகனங்களின் என்ஜின்களை பொருத்தி மீன்பிடிக்கத் தடை செய்யப்பட்டது. இந்த நிலையில், தனுஷ்கோடி பகுதியில் நாட்டுப்படகுகளில் தடை செய்யப்பட்ட என்ஜின்களை பொருத்தி மீன்பிடிப்பதாக புகாா்கள் வந்தன.
இதைத்தொடா்ந்து, மீன்வளம், மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் தமிழ்மாறன், மீன்வளத் துறை ஆய்வாளா் விஷால் ஆகியோா் தனுஷ்கோடி, அரிச்சல்முனை பகுதிகளில் ஆய்வு செய்தனா். அப்போது இரண்டு நாட்டுப் படகுகளில் தடை செய்யப்பட்ட என்ஜின்கள் பொருத்தியிருப்பது கண்டறியப்பட்டு, அவற்றை பறிமுதல் செய்தனா்.
இனி வரும் காலங்களில் தடை செய்யப்பட்ட என்ஜின்களை நாட்டுப் படகில் பொருத்தி மீன்பிடிப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மீனவா்களுக்கு அவா்கள் எச்சரிக்கை விடுத்தனா்.