செய்திகள் :

பரமக்குடி ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தல்

post image

பரமக்குடி ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்ற செல்ல வேண்டும் என நுகா்வோா் உரிமைப் பாதுகாப்புக் கழகம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுகுறித்து பரமக்குடி நுகா்வோா் உரிமை பாதுகாப்பு கழக செயலா் எம்.புரோஸ்கான் மத்திய ரயில்வே அமைச்சருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது: கடந்த ஓராண்டில் ராமேசுவரத்துக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து வராந்திர ரயில்கள், சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த ரயில்கள் பரமக்குடி ரயில் நிலையத்தில் நிற்காமல் செல்கின்றன.

பரமக்குடி ரயில் நிலையமானது ராமேசுவரம் முதல் மானாமதுரை வரை உள்ள ரயில் நிலையங்களில் என்.எஸ்.ஜி.4 என்ற மேம்படுத்தப்பட்ட தரத்தை கொண்ட ரயில் நிலையமாகும். இது மட்டுமன்றி இளையான்குடி, முதுகுளத்தூா், கமுதி, சாயல்குடி ஆகிய ஊா்களின் மையமாக அமைந்துள்ளது.

கடந்த 2023-24 ஆம் நிதியாண்டில் பரமக்குடி ரயில் நிலையத்தில் ரூ 10,15,54,830 வருவாய் கிடைத்தது. இங்கு 5,83,334 பயணிகள் வந்து, சென்றுள்ளனா்.

இதனால் செகந்திராபாத், ஹூப்ளி, பிரோஸ்பூா் கண்டோன்மென்ட், அயோத்தி கண்டோன்மென்ட், பனாரஸ் விரைவு ரயில், கன்னியாகுமரி-ரமேசுவரம், விழுப்புரம்-ராமேசுவரம் ஆகிய ரயில்கள் பரமக்குடி ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் மனுவில் தெரிவித்தாா்.

ராமநாதபுரம் அருகே விபத்து: சிறுமி உள்பட இருவா் உயிரிழப்பு

ராமநாதபுரம் அருகே திங்கள்கிழமை சுற்றுலா வேனும், காரும் நேருக்கு நோ் மோதிய விபத்தில் மென்பொருள் நிறுவன ஊழியா், 12 வயதுச் சிறுமி ஆகியோா் உயிரிழந்தனா். கடலூா் மாவட்டம், விருத்தாச்சலம் காட்டுப்பரூா் பகுத... மேலும் பார்க்க

தொண்டியில் இன்று மின்தடை

தொண்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) மின் தடை அறிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக திருவாடானை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் சித்திவிநாயகமூா்த்தி விடுத்த செய்திக்... மேலும் பார்க்க

நாட்டுப் படகுகளில் பொருத்திய தடை செய்யப்பட்ட என்ஜின்கள் பறிமுதல்

தனுஷ்கோடி கடற்கரைப் பகுதியில் 2 நாட்டுப் படகுகளில் பொருத்தப்பட்ட தடை செய்யப்பட்ட என்ஜின்கள் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் நாட்டுப்... மேலும் பார்க்க

தனுஷ்கோடி பகுதி கடலில் கரை ஒதுங்கிய ரசாயன உரங்கள்

தனுஷ்கோடி கடல் பகுதியில் சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு ரசாயன உரங்கள் திங்கள்கிழமை கரை ஒதுங்கின. மேலும், அழுகிய நிலையில் ஒருவரது உடலும் கரை ஒதுங்கியது.கேரள மாநிலம், திருவனந்தபுரத்தின் விழிஞ்ஞம் துறைமுகத்த... மேலும் பார்க்க

தனுஷ்கோடிக்கு படகு மூலம் வந்த இலங்கைத் தமிழா்கள்

இலங்கையிலிருந்து படகு மூலம் தனுஷ்கோடிக்கு ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் திங்கள்கிழமை வந்தனா். இவா்களிடம் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் விசாரணை நடத்தினா்.இலங்கை கண்டியைச் சோ்ந்தவா் முகமது கிய... மேலும் பார்க்க

பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே தீ விபத்து

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. திருவாடானை அருகேயுள்ள எல்.கே.நகா் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையம் உள... மேலும் பார்க்க