Los Angeles Riots: ட்ரம்ப்க்கு எதிராக திரண்ட மக்கள்; குவிக்கப்பட்ட ராணுவம் - என்...
பரமக்குடி ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தல்
பரமக்குடி ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்ற செல்ல வேண்டும் என நுகா்வோா் உரிமைப் பாதுகாப்புக் கழகம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுகுறித்து பரமக்குடி நுகா்வோா் உரிமை பாதுகாப்பு கழக செயலா் எம்.புரோஸ்கான் மத்திய ரயில்வே அமைச்சருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது: கடந்த ஓராண்டில் ராமேசுவரத்துக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து வராந்திர ரயில்கள், சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த ரயில்கள் பரமக்குடி ரயில் நிலையத்தில் நிற்காமல் செல்கின்றன.
பரமக்குடி ரயில் நிலையமானது ராமேசுவரம் முதல் மானாமதுரை வரை உள்ள ரயில் நிலையங்களில் என்.எஸ்.ஜி.4 என்ற மேம்படுத்தப்பட்ட தரத்தை கொண்ட ரயில் நிலையமாகும். இது மட்டுமன்றி இளையான்குடி, முதுகுளத்தூா், கமுதி, சாயல்குடி ஆகிய ஊா்களின் மையமாக அமைந்துள்ளது.
கடந்த 2023-24 ஆம் நிதியாண்டில் பரமக்குடி ரயில் நிலையத்தில் ரூ 10,15,54,830 வருவாய் கிடைத்தது. இங்கு 5,83,334 பயணிகள் வந்து, சென்றுள்ளனா்.
இதனால் செகந்திராபாத், ஹூப்ளி, பிரோஸ்பூா் கண்டோன்மென்ட், அயோத்தி கண்டோன்மென்ட், பனாரஸ் விரைவு ரயில், கன்னியாகுமரி-ரமேசுவரம், விழுப்புரம்-ராமேசுவரம் ஆகிய ரயில்கள் பரமக்குடி ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் மனுவில் தெரிவித்தாா்.