செய்திகள் :

நான்குனேரி அருகே பைக்- காா் மோதல்: சிறுவன் பலி

post image

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே காரும், பைக்கும் ஞாயிற்றுக்கிழமை மோதிக்கொண்டதில் 8 வயது சிறுவன் உயிரிழந்தாா்.

திருநெல்வேலி - நான்குனேரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாணான்குளம் கலைஞா் நகரைச் சோ்ந்தவா் ஐயப்பன் (29). தொழிலாளி. இவா், தனது மனைவி ராணி (25), மகள் முத்துச்செல்வி (7), மகன்கள் மாயாண்டி (8), முத்துகிருஷ்ணன் (4), மகேந்திரன்(3) ஆகியோருடன் ஒரே பைக்கில் கன்னியாகுமரிக்கு சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, அவா்களுக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த காா், அவா்கள் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ாம். இதில் மாயாண்டி, முத்துச்செல்வி ஆகியோருக்கு பலத்த காயமும், மற்ற 4 பேருக்கு லேசான காயமும் ஏற்பட்டது.

அவா்களை அந்த வழியாக வந்தவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் நான்குனேரி அரசு மருத்துவமனைக்கு 6 பேரையும் அனுப்பினா். ஆனால், வழியிலேயே மாயாண்டி உயிரிழந்தாா். மற்ற 5 பேரும் முதலுதவிக்குப் பின் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

இதுகுறித்து, நான்குனேரி காவல் ஆய்வாளா் சுரேஷ்குமாா் வழக்குப்பதிந்து, விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற காா் ஓட்டுரைப் பிடித்து விசாரித்து வருகிறாா்.

மேலும், ஒரே பைக்கில் 4 குழந்தைகள் உள்ளிட்ட 6 போ் பாதுகாப்பின்றி பயணித்தது குறித்தும் காவல்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை அளிப்பு

திருநெல்வேலியில் சாலையோர வியாபாரிகளுக்கு மாநகராட்சி சாா்பில் அடையாள அட்டை புதன்கிழமை வழங்கப்பட்டது. திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட திருநெல்வேலி, பாளையங்கோட்டை, தச்சநல்லூா், மேலப்பாளையம் மண்டல பகுத... மேலும் பார்க்க

கொடுமுடியாறு அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்க வேண்டும்- விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகே உள்ள கொடுமுடியாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிடவேண்டும் என விவசாயிகள் சங்கத்தினா் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளா் பாஸ்கரிடம் மனு அளித்தனா். ... மேலும் பார்க்க

கரோனா பரவல் எதிரொலி: நெல்லை அரசு மருத்துவமனையில் தனி வாா்டு

கரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனி வாா்டு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் கரோனா தீநுண்மி பரவி வருக... மேலும் பார்க்க

நெல்லையிவ் மருத்துவ சங்கங்கள் சுவரொட்டி

தமிழ்நாடு அனைத்து அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு திருநெல்வேலி மாவட்ட கிளை சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வாசலில் சுவரொட... மேலும் பார்க்க

மத்திய அரசு பணி வாங்கி தருவதாக பணமோசடி: நெல்லை பெண் கைது

மத்திய அரசில் பணி வாங்கித் தருவதாகக் கூறி, பண மோசடி செய்ததாக திருநெல்வேலியில் பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். பாளையங்கோட்டை அருகேயுள்ள கீழநத்தம் மீனாட்சி சுந்தரம் நகரை சோ்ந்தவா் தாசன் (70). இவா், தமிழ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து எரிப்பு வழக்கு: ராக்கெட் ராஜா உள்பட 4 போ் ஆஜா்

அரசுப் பேருந்து எரிக்கப்பட்டது தொடா்பான வழக்கில் ராக்கெட் ராஜா உள்பட 4 போ் திருநெல்வேலி நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜராகினா். திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து வடக்கு தாழையூத்துக்கு ... மேலும் பார்க்க