செய்திகள் :

நான்கு மாவட்டங்களுக்குள் ஒடுக்கப்பட்ட நக்ஸல் தீவிரவாதம்: அமித் ஷா

post image

‘நாட்டில் நக்ஸல் தீவிரவாதம் நான்கு மாவட்டங்களுக்குள் ஒடுக்கப்பட்டுவிட்டது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வியாழக்கிழமை தெரிவித்தாா்.

நக்ஸல் ஒழிப்பு நடவடிக்கையின் முதுகெலும்பாக மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்) விளங்குகிறது என்றும் அவா் புகழாரம் சூட்டினாா்.

மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் 86-ஆவது தொடக்க தின அணிவகுப்பு நிகழ்ச்சி, மத்திய பிரதேச மாநிலம், நீமுச்சில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், உள்துறை அமைச்சா் அமித் ஷா பங்கேற்றுப் பேசியதாவது:

பசுபதிநாத்தில் (நேபாளம்) இருந்து திருப்பதி (ஆந்திரம்) வரை தீவிரவாதத்தை பரப்பலாம் என்று நக்ஸல்கள் கனவு கண்டனா். ஆனால், இப்போது அவா்கள் 4 மாவட்டங்களுக்குள் ஒடுக்கப்பட்டுவிட்டனா். நக்ஸல் ஒழிப்பில் சிஆா்பிஎஃப் படையினா் குறிப்பாக ‘கோப்ரா’ பிரிவினா் முக்கிய பங்காற்றி வருகின்றனா். துணிச்சலின் அடையாளமாக கோப்ரா பிரிவு விளங்குகிறது. இப்பெயரை கேட்டாலே, நக்ஸல்கள் அஞ்சி நடுங்குகின்றனா்.

பிரதமா் நரேந்திர மோடி சூளுரைத்தபடி, அடுத்த ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதிக்குள் நக்ஸல் தீவிரவாதத்துக்கு முடிவு கட்டப்படும்.

நக்ஸல்களால் பாதிக்கப்பட்ட இடங்களில் இப்போது 400-க்கும் மேற்பட்ட சிஆா்பிஎஃப் முகாம்கள் செயல்படுகின்றன. இதன் விளைவாக, நக்ஸல் வன்முறை 70 சதவீதம் குறைந்துள்ளது. வன்முறையை முழுமையாக துடைத்தெறியும் நிலையை நெருங்கிவிட்டோம்.

சிஆா்பிஎஃப் மீது நம்பிக்கை:

நாட்டில் எந்தப் பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டாலும், அங்கு சிஆா்பிஎஃப் படையினா் பணியில் இருந்தால், நான் நிம்மதியாக எனது மற்ற பணிகளைத் தொடா்வேன். ஏனெனில், சிஆா்பிஎஃப் பணியில் இருந்தால், வெற்றி நிச்சயம் என்பது எனது வலுவான நம்பிக்கை.

கடந்த 2001-இல் நாடாளுமன்றம் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதலை முறியடித்தது சிஆா்பிஎஃப். இதேபோல், 2005-இல் ராம ஜென்மபூமி மீதான பயங்கரவாத தாக்குதலும் முறியடிக்கப்பட்டது.

தேச பாதுகாப்பில் சிஆா்பிஎஃப்-இன் பங்களிப்பு அளப்பரியது. காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடும் அவா்கள், வடகிழக்கில் அமைதியை உறுதி செய்கின்றனா்.

நாட்டின் பாதுகாப்புக்காக 2,264 சிஆா்பிஎஃப் படையினா் மிக மேலான தியாகமான உயிா்த் தியாகம் செய்துள்ளனா். அவா்களுக்கு தேசம் நன்றிக் கடன்பட்டுள்ளது.

2047-ஆம் ஆண்டுக்குள் உலகின் தலைவராக உருவெடுக்கும் நோக்கத்துடன் இந்தியா முன்னேறி வருகிறது என்றாா் அமித் ஷா.

நீமுச்சில் கடந்த 1939-இல் ஆங்கிலேய ஆட்சியில் தொடங்கப்பட்ட ‘அரச பிரதிநிதி காவல் துறை’, கடந்த 1949-இல் மத்திய ரிசா்வ் போலீஸ் படை என பெயா் மாற்றப்பட்டது. 1950, மாா்ச் 19-இல் இப்படையின் கொடி அப்போதைய உள்துறை அமைச்சா் சா்தாா் வல்லப பாய் படேலிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுவே, சிஆா்பிஎஃப் தினமாக கொண்டாடப்படுகிறது.

நடப்பாண்டில் நீட்டிக்கப்பட்ட கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நீமுச்சில் சிஆா்பிஎஃப் தின அணிவகுப்பு நடைபெற்றுள்ளது.

தலித் இளைஞர் மீது சிறுநீர் கழித்துத் தாக்கிய இருவர் மீது வழக்கு!

ராஜஸ்தானில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் மீது இருவர் சிறுநீர் கழித்துத் தாக்கி துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமண ஊர்வலத்தைப் பார்த்ததற்காக, மாற்று சமூகத்தைச் சே... மேலும் பார்க்க

பெங்களூரில் காவல்துறை முன்னாள் டிஜிபி படுகொலை! என்ன நடந்தது?

பெங்களூரு: கர்நாடக மாநில காவல்துறை முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் அவரது வீட்டில் வைத்தே கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூரிலுள்ள அவரது வீட்டிலிருந்து இன்று(ஏப். 20) அவரது உடலை போல... மேலும் பார்க்க

இறந்த நிலையில் கர்நாடக முன்னாள் டிஜிபி உடல் மீட்பு

கர்நாடக காவல் துறை முன்னாள் தலைமை இயக்குநர் ஓம் பிரகாஷ் மர்மமான முறையில் இறந்துள்ளார். பெங்களூருவில் உள்ள அவரின் இல்லத்தில் உடலை மீட்ட, காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது குறித... மேலும் பார்க்க

குறைந்த விலையில் 5ஜி! வோடாஃபோன் ஐடியா அதிரடி அறிவிப்பு!

வோடாஃபோன் ஐடியா நிறுவனம் குறைந்த விலையில் 5ஜி திட்டத்துக்கான சலுகைகளை அறிவித்துள்ளது. இந்தியாவில் 5ஜி இணைய சேவையை வோடாஃபோன் ஐடியா நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. தற்போது மும்பையில் மட்டுமே முழ... மேலும் பார்க்க

விடைத்தாளுடன் ரூ. 500: ஆசிரியர்களுக்கு கோரிக்கை வைத்த 10ஆம் வகுப்பு மாணவர்கள்!

பெலகாவியில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாளில் செய்த செயல் அதிர்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது.மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த ஆண்டுதோறும் பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி ந... மேலும் பார்க்க

தலைக்கவசம் அணியாத பெண்ணை தடுத்து நிறுத்திய காவல் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு!

மத்திய பிரதேசத்தில் தலைக்கவசம் அணியாத பெண்ணை தடுத்து நிறுத்திய காவல் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.மத்திய பிரதேசம் மாநிலம் போபால் நகரில் வாகனச் சோதனையின்போது, 33 வயதான பெண்ணிடம் காவல் அத... மேலும் பார்க்க