செய்திகள் :

நான் இன்னும் 30 - 40 ஆண்டுகள் வாழ விரும்புகிறேன்: தலாய் லாமா

post image

திபெத்திய புத்த மதத்தின் தலைமை மதகுருவான தலாய் லாமா, தனது வாரிசு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, மக்களுக்கு சேவை செய்ய தான் இன்னும் 30 - 40 ஆண்டுகள் வாழ விரும்புவதாகக் கூறியுள்ளார்.

திபெத்திய புத்த மதத்தின் தலைமை மதகுருவான தலாய் லாமாவின் 90-வது பிறந்த நாள் நாளை (ஜூலை 6) கொண்டாடப்படவுள்ளது.

இந்நிலையில், தரம்சாலாவிலுள்ள பிரதான தலாய் லாமா கோயில், நீண்ட ஆயுளுக்கான பிரார்த்தனைக் குறித்து பேசிய தலாய் லாமா, கடவுளின் ஆசீர்வாதம் தனக்கு உள்ளது என்பதற்கான தெளிவான அறிகுறிகள் தன்னிடம் தென்படுவதாகக் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது:

“ பல தீர்க்க தரிசனங்களைப் பார்க்கும்போது, எனக்கு அவலோகிதேஸ்வராவின் ஆசீர்வாதம் இருப்பதாக உணருகின்றேன். என்னால் முடிந்ததை இதுவரை செய்துள்ளேன். நான் மேலும் 30 - 40 ஆண்டுகள் வாழ விரும்புகிறேன். நாம் நமது நாட்டை இழந்து, இந்தியாவில் நாடுகடத்தப்பட்டு வாழ்வதனாலே என்னால் தரம்சாலாவில் வசிப்பவர்களுக்கு என்னால் நிறைய நன்மைகளைச் செய்ய முடிந்தது” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, தலாய் லாமாவின் மதம் இந்தியாவில் தொடர்வது குறித்து உருவான வதந்திகளுக்கு, நாங்கள் மதங்கள் மற்றும் நம்பிக்கைகள் குறித்து எந்தவொரு கருத்து தெரிவிக்கவோ அல்லது நிலைப்பாடு எடுக்கவோ மாட்டோம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The Dalai Lama, the head of Tibetan Buddhism, has said he wants to live another 30-40 years to serve the people, putting an end to rumors about his successor.

இதையும் படிக்க: பாகிஸ்தான் - அஜர்பைஜான் இடையில் ரூ.17,000 கோடி முதலீடு ஒப்பந்தம்!

பாஜகவில் இணைந்த முன்னாள் குடியரசு துணைத் தலைவர் பேரன்!

முன்னாள் குடியரசு துணைத் தலைவரும் மறைந்தவருமான கிருஷண்காந்தின் பேரன் விராட் காந்த் பாஜகவில் இணைந்தார்.தில்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் கட்சியின் தேசிய பொதுச்செயலர் தருண் சுக், பஞ்சாப் பாஜக தலைவர் சுன... மேலும் பார்க்க

தொழிலாளர்களின் தினசரி வேலைநேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு! தெலங்கானா அரசு உத்தரவு

தெலங்கானாவிலும் நாளொன்றுக்கு 10 மணி நேரம் வேலை என்கிற முறை அமலாகிறது.தெலங்கானா அரசு சனிக்கிழமை(ஜூலை 5) பிறப்பித்துள்ள உத்தரவில் வணிக நிறுவனங்களில்(கடைகளுக்குப் பொருந்தாது) தொழிலாளர்களின் வேலை நேரம் நா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியின் ஒரு சுவரில் பெயின்ட் அடிக்க 233 தொழிலாளர்கள்; 4 கதவுகளுக்கு 425 பேர்!

மத்தியப் பிரதேசத்தில் அரசுப் பள்ளிகளில் பெயின்ட்டுக்காக செலவிடப்பட்டதாக வெளியிடப்பட்ட கட்டண விவரங்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளது.மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் ஷாஹ்தோல் மாவட்டம், சாகண்டி கிராமத்தில் ஓர் ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: பயணி தவறவிட்ட ரூ.3.2 லட்சம் பணத்தை ஒப்படைத்த ரயில்வே போலீஸார் !

மகாராஷ்டிரத்தில் உள்ளூர் ரயிலில் பயணி தவறவிட்ட பையை மீட்டு அதன் உரிமையாளருக்கு திருப்பி அனுப்பியதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த அபிஷேக் சுக்லா (30) சர்ச்கேட் செல்... மேலும் பார்க்க

குஜராத்தில் 21 வயதுக்குள்பட்ட இளம்பெண் ஊராட்சி தலைவராக தேர்வு: விதிகளை மீறியதா தேர்தல் ஆணையம்?

குஜராத்தில் 19 வயது பெண் ஊராட்சி தலைவராக தேர்வான விவகாரத்தில் தேர்தல் ஆணையம் வேட்பாளர்களின் வயது உள்ளிட்ட விவரங்களை முறையாக ஆய்வு செய்யாததே முக்கிய காரணமென விமர்சனம் எழுந்துள்ளது.ஊராட்சி தலைவராக ஒருவர... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி, மற்றொருவர் காயம்

மேற்கு வங்கத்தில் நாட்டு வெடி குண்டு வெடித்ததில் ஒருவர் பலியான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம், புர்பா பர்தமான் மாவட்டத்தில் உள்ள ரஜோவா கிராமத்தில் வீடு ஒன்றில் நேற்றிரவு 8.30 ... மேலும் பார்க்க