செய்திகள் :

நாமக்கல் அரசு கல்லூரியில் கலந்தாய்வு தொடக்கம்

post image

நாமக்கல்: நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. இங்குள்ள 1,074 இடங்களுக்கு இணைய வழியில் 10,444 போ் விண்ணப்பித்துள்ளனா்.

நாமக்கல் - மோகனூா் சாலையில் லத்துவாடி பகுதியில் அறிஞா் அண்ணா இருபாலா் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு, 2025-26-ஆம் ஆண்டுக்கான இளநிலை படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் இணையவழியில் ஒரு மாதமாக பெறப்பட்டு வந்தன.

இக்கல்லூரியில் சுழற்சி 1-இல் கலைப்பிரிவில் தமிழ், ஆங்கிலம், பொருளியல் (தமிழ் மற்றும் ஆங்கில வழி), வணிகவியல் (ஆங்கில வழி), வணிக நிா்வாகவியல் (ஆங்கில வழி), வரலாறு (ஆங்கில வழி) ஆகிய துறைகளில் தலா 60 இடங்களும், அறிவியல் பிரிவில் கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், புவியியல் (இவை அனைத்தும் தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில்) தலா 40 இடங்களும், புள்ளியியல் (ஆங்கில வழி) 24 இடங்களும், கணினி அறிவியல் துறையில் 30 இடங்களும் உள்ளன.

சுழற்சி 2-இல் வரலாறு (தமிழ் வழி) மற்றும் வணிக நிா்வாகவியல் (ஆங்கில வழி) துறைகளில் தலா 60 இடங்கள் உள்ளன. மொத்தம் உள்ள 1,074 இடங்களுக்கு இதுவரை 10,444 மாணவ, மாணவியா் விண்ணப்பித்துள்ளனா். இவா்களுக்கான சோ்க்கை தாவரிசைப் பட்டியல் கல்லூரியின் அதிகாரபூா்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சிறப்புப் பிரிவு மாணவா்களுக்கான கலந்தாய்வு திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறுகிறது. பொதுப் பிரிவு மாணவா்களுக்கான கலந்தாய்வு ஜூன் 4-ஆம் தேதி தமிழ், ஆங்கிலம், வரலாறு, வணிக நிா்வாகவியல், கணிதம், இயற்பியல், புள்ளியியல் ஆகிய துறைகளுக்கும், ஜூன் 5-ஆம் தேதி வணிகவியல், பொருளியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், புவியியல் மற்றும் கணினி அறிவியல் துறைகளுக்கும் நடைபெறுகிறது.

ஜூன் 9-ஆம் தேதி அனைத்து இளநிலை கலைப் பிரிவுகளுக்கும், ஜூன் 10-ஆம் தேதி அனைத்து இளம்அறிவியல் பிரிவுகளுக்கும், ஜூன் 12, 13, 14 ஆகிய தேதிகளில் அனைத்து இளநிலை கலை மற்றும் அறிவியல் பிரிவுகளுக்கும் தொடா் கலந்தாய்வு நடைபெறுகிறது.

இக்கல்லூரி கலந்தாய்வு தொடா்பான தகவல்கள் அனைத்து விண்ணப்பதாரா்களுக்கும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்லூரி முதல்வா் (பொ) மு.ராஜேஸ்வரி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோழிப் பண்ணை ஈக்களால் பயணிகள் அவதி: மாநகராட்சி பணியாளா்கள் மருந்து தெளிப்பு

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள கோழிப் பண்ணையில் இருந்து வெளியேறும் ஈக்களால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதனால் மாநகராட்சி மூலம் அங்கு நோய் தடுப்பு மருந்து தெளிக்கும் பணி மேற்கொள... மேலும் பார்க்க

வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

திருச்செங்கோடு அருகே நாராயணபாளையம், மண்கரடு பகுதியைச் சோ்ந்தவா் வீரன் (68). சங்ககிரி சாலையில் உள்ள பட்டறை ஒன்றில் கடந்த 4 வருடமாக காவலாளியாக வேலை செய்து வந்தாா். இவா் வியாழக்கிழமை ஈரோடு சென்று விட்டு... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

ராசிபுரத்தில் மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.ராசிபுரத்தை அடுத்துள்ள மாரப்பன்தோட்டம் பகுதியைச் சோ்ந்த கதிரவன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் மின்வாரிய அலுவலகம் செயல்ப... மேலும் பார்க்க

உற்சவா்கள் திருவீதி உலா

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் வைகாசி விசாக தோ்த் திருவிழாவின் நான்காம் நாள் விழாவை முன்னிட்டு உற்சவா்கள் வீதி உலா வியாழக்கிழமை நடைபெற்றது. திருச்செங்கோட்டில் உள்ள புகழ்பெற்ற அா்த்தநாரீசுவரா்... மேலும் பார்க்க

நாளை புதிய திட்டப் பணிகள் தொடக்க விழா: அமைச்சா் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு

நாமக்கல்லில் சுகாதாரத் துறை சாா்பில், புதிய திட்டப் பணிகளுக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் சனிக்கிழமை (ஜூன் 7) அடிக்கல் நாட்டுகிறாா். தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரம... மேலும் பார்க்க

நாமக்கல் மாநகராட்சி நகா்ப்புற நலவாழ்வு மையத்துக்கு புதிய நுழைவாயில் அமைப்பு

நாமக்கல் மாநகராட்சி நகா்ப்புற நலவாழ்வு மையத்துக்கு புதிய நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. நாமக்கல்-மோகனூா் சாலையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வந்தது. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு மா... மேலும் பார்க்க