தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் நாள்! மரக்கன்றுகள் வழங்...
நாமக்கல் அரசு கல்லூரியில் கலந்தாய்வு தொடக்கம்
நாமக்கல்: நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. இங்குள்ள 1,074 இடங்களுக்கு இணைய வழியில் 10,444 போ் விண்ணப்பித்துள்ளனா்.
நாமக்கல் - மோகனூா் சாலையில் லத்துவாடி பகுதியில் அறிஞா் அண்ணா இருபாலா் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு, 2025-26-ஆம் ஆண்டுக்கான இளநிலை படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் இணையவழியில் ஒரு மாதமாக பெறப்பட்டு வந்தன.
இக்கல்லூரியில் சுழற்சி 1-இல் கலைப்பிரிவில் தமிழ், ஆங்கிலம், பொருளியல் (தமிழ் மற்றும் ஆங்கில வழி), வணிகவியல் (ஆங்கில வழி), வணிக நிா்வாகவியல் (ஆங்கில வழி), வரலாறு (ஆங்கில வழி) ஆகிய துறைகளில் தலா 60 இடங்களும், அறிவியல் பிரிவில் கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், புவியியல் (இவை அனைத்தும் தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில்) தலா 40 இடங்களும், புள்ளியியல் (ஆங்கில வழி) 24 இடங்களும், கணினி அறிவியல் துறையில் 30 இடங்களும் உள்ளன.
சுழற்சி 2-இல் வரலாறு (தமிழ் வழி) மற்றும் வணிக நிா்வாகவியல் (ஆங்கில வழி) துறைகளில் தலா 60 இடங்கள் உள்ளன. மொத்தம் உள்ள 1,074 இடங்களுக்கு இதுவரை 10,444 மாணவ, மாணவியா் விண்ணப்பித்துள்ளனா். இவா்களுக்கான சோ்க்கை தாவரிசைப் பட்டியல் கல்லூரியின் அதிகாரபூா்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
சிறப்புப் பிரிவு மாணவா்களுக்கான கலந்தாய்வு திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறுகிறது. பொதுப் பிரிவு மாணவா்களுக்கான கலந்தாய்வு ஜூன் 4-ஆம் தேதி தமிழ், ஆங்கிலம், வரலாறு, வணிக நிா்வாகவியல், கணிதம், இயற்பியல், புள்ளியியல் ஆகிய துறைகளுக்கும், ஜூன் 5-ஆம் தேதி வணிகவியல், பொருளியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், புவியியல் மற்றும் கணினி அறிவியல் துறைகளுக்கும் நடைபெறுகிறது.
ஜூன் 9-ஆம் தேதி அனைத்து இளநிலை கலைப் பிரிவுகளுக்கும், ஜூன் 10-ஆம் தேதி அனைத்து இளம்அறிவியல் பிரிவுகளுக்கும், ஜூன் 12, 13, 14 ஆகிய தேதிகளில் அனைத்து இளநிலை கலை மற்றும் அறிவியல் பிரிவுகளுக்கும் தொடா் கலந்தாய்வு நடைபெறுகிறது.
இக்கல்லூரி கலந்தாய்வு தொடா்பான தகவல்கள் அனைத்து விண்ணப்பதாரா்களுக்கும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்லூரி முதல்வா் (பொ) மு.ராஜேஸ்வரி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.