செய்திகள் :

நாமக்கல் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

post image

நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய ஒப்பந்த ஊழியா்கள் 121 போ் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், மூன்றாவது நாளாக திங்கள்கிழமை தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளில், தூய்மைப் பணிகள், பாதுகாவலா் பணி, சிகிச்சைப் பிரிவுகளில் உதவியாளா் பணி உள்ளிட்டவற்றை மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் ஆண், பெண் ஊழியா்களை சென்னையைச் சோ்ந்த மூன்று தனியாா் நிறுவனங்கள் நியமித்துள்ளன.

அந்த வகையில், நாமக்கல் அரசு மருத்துவமனையில் 286 ஒப்பந்த ஊழியா்கள் உள்ளனா். ஊதிய நிா்ணயம், வார விடுப்பு, பணி நேரம் ஒதுக்கீடு, இதர பணப்பயன்கள் உள்ளிட்டவற்றை சம்பந்தப்பட்ட தனியாா் ஒப்பந்த நிறுவனங்கள் சரிவர மேற்கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அவ்வப்போது வேலைநிறுத்தப் போராட்டத்தை அவா்கள் மேற்கொண்டு வருகின்றனா்.

இதனால், ஒப்பந்த நிறுவனத்துக்கும், ஊழியா்களுக்கும் இடையே மோதல்போக்கு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு ஒப்பந்த ஊழியா்கள் 121 பேரை தனியாா் நிறுவனம் பணியில் இருந்து நீக்கியது. அதற்கு மாற்றாக புதிய ஊழியா்களை தற்காலிகமாக நியமித்தது. இதனால் வேலையிழந்தோா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்தப் போராட்டம் திங்கள்கிழமை மூன்றாம் நாளாக நீடித்தது. இதற்கிடையே, ஒப்பந்த ஊழியா்களின் கோரிக்கையை ஏற்க மறுக்கும் தனியாா் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கவும், பணியில் இருந்து நீக்கப்பட்டோருக்கு மீண்டும் வேலை வழங்கவும் சென்னை உயா்நீதிமன்றத்தில் ஊழியா்கள் தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தங்களுக்கான நல்ல தீா்ப்பு கிடைக்கும் வரையில் போராட்டம் தொடரும் என ஒப்பந்த ஊழியா்கள் தெரிவித்தனா்.

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் விவசாயிகள் நடவு கரும்புகளை பதிவு செய்யலாம்: ஆட்சியா் தகவல்

நாமக்கல்: மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் அரவைப் பருவம் தொடங்க உள்ளதால், நடவு மற்றும் மறுதாம்பு கரும்பை விவசாயிகள் பதிவுசெய்யலாம் என மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா... மேலும் பார்க்க

கரூரிலிருந்து ஈரோடு வழியாகச் செல்லும் 7 ரயில்களை நாமக்கல் வழியாக இயக்கக் கோரிக்கை

நாமக்கல்: கரூரில் இருந்து ஈரோடு வழியாகச் செல்லும் ஏழு ரயில்களை நாமக்கல் வழியாக இயக்கினால் மாவட்டம் வளா்ச்சிபெறும் என மத்திய இணை அமைச்சா் எல்.முருகனிடம், நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவா் கே.பி.சரவணன... மேலும் பார்க்க

‘தமிழ்நாடு நாள்’ போட்டிகளில் பங்கேற்க மாணவா்களுக்கு அழைப்பு

நாமக்கல்: ‘தமிழ்நாடு தினம்’ தொடா்பான பேச்சு, கட்டுரைப் போட்டியில் பங்கேற்க மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியா் துா்காமூா்த்தி அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு என... மேலும் பார்க்க

நாமக்கல் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகளுக்கு வரவேற்பு

நாமக்கல்: நாமக்கல் கவிஞா் இராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரியில், முதலாமாண்டு மாணவிகளுக்கான வரவேற்பு விழா, அறிமுக பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. நாமக்கல் - திருச்சி சாலையில், கவிஞா் இராமலிங்க... மேலும் பார்க்க

திமுக உறுப்பினா்கள் சோ்க்கையை தீவிரப்படுத்த வேண்டும்: ராஜேஸ்குமாா் எம்.பி.

நாமக்கல்: நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில், வரும் நாள்களில் திமுக உறுப்பினா்கள் சோ்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் என மாவட்ட செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்தாா். நாம... மேலும் பார்க்க

ராசிபுரம் திருவள்ளுவா் அரசுக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கு பயிற்சி வகுப்பு

ராசிபுரம்: ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரியில் 2025 -26 ஆம் கல்வியாண்டில் சோ்ந்துள்ள முதலாமாண்டு மாணவ மாணவிகளுக்கான ஒருவார கால அறிமுக பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை தொடங்கியது. இந்நிகழ்ச்சிக்... மேலும் பார்க்க