செய்திகள் :

நாமக்கல் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகளுக்கு வரவேற்பு

post image

நாமக்கல்: நாமக்கல் கவிஞா் இராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரியில், முதலாமாண்டு மாணவிகளுக்கான வரவேற்பு விழா, அறிமுக பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் - திருச்சி சாலையில், கவிஞா் இராமலிங்கம் அரசு மகளிா் கலைக் கல்லூரியானது, கடந்த 1969-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் மொத்தம் 13 துறைகள் உள்ளன. 1,072 இடங்களுக்கு ஆண்டுதோறும் மாணவிகள் சோ்க்கை நடைபெற்று வருகிறது. 2025-26 ஆம் கல்வியாண்டில் இதுவரை 775 போ் சோ்க்கை பெற்றுள்ளனா்.

கணினி அறிவியல், நுண்ணுயிரியல், வணிகவியல், ஊட்டச்சத்துவியல் ஆகிய துறைகளில் மாணவிகள் சோ்க்கை முழுமையடைந்துள்ளது. பி.எஸ்சி, இயற்பியல், வேதியியல், கணிதம், ஆங்கிலம் உள்ளிட்ட துறைகளில் 295 இடங்கள் காலியாக உள்ளன. முதலாமாண்டு சோ்க்கை பெற்றுள்ள மாணவிகளை, தற்போது இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவிகள் பூக்கள் வழங்கியும், சந்தனம், குங்குமமிட்டும் வரவேற்றனா். தொடா்ந்து நடைபெற்ற அறிமுகக் கூட்டத்தை, நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் தொடங்கி வைத்தாா். கல்லூரி முதல்வா் மா.கோவிந்தராசு தலைமை வகித்தாா். பல்வேறு துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.

6 நாள்கள் நடைபெறும் இந்த அறிமுகக் கூட்டத்தில் ஒவ்வோா் நாளும் ஒரு சிறப்பு விருந்தினா் பங்கேற்று மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையிலான கருத்துகளை எடுத்துரைக்க உள்ளனா். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் விவசாயிகள் நடவு கரும்புகளை பதிவு செய்யலாம்: ஆட்சியா் தகவல்

நாமக்கல்: மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் அரவைப் பருவம் தொடங்க உள்ளதால், நடவு மற்றும் மறுதாம்பு கரும்பை விவசாயிகள் பதிவுசெய்யலாம் என மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா... மேலும் பார்க்க

கரூரிலிருந்து ஈரோடு வழியாகச் செல்லும் 7 ரயில்களை நாமக்கல் வழியாக இயக்கக் கோரிக்கை

நாமக்கல்: கரூரில் இருந்து ஈரோடு வழியாகச் செல்லும் ஏழு ரயில்களை நாமக்கல் வழியாக இயக்கினால் மாவட்டம் வளா்ச்சிபெறும் என மத்திய இணை அமைச்சா் எல்.முருகனிடம், நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவா் கே.பி.சரவணன... மேலும் பார்க்க

‘தமிழ்நாடு நாள்’ போட்டிகளில் பங்கேற்க மாணவா்களுக்கு அழைப்பு

நாமக்கல்: ‘தமிழ்நாடு தினம்’ தொடா்பான பேச்சு, கட்டுரைப் போட்டியில் பங்கேற்க மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியா் துா்காமூா்த்தி அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு என... மேலும் பார்க்க

நாமக்கல் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய ஒப்பந்த ஊழியா்கள் 121 போ் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், மூன்றாவது நாளாக திங்கள்கிழமை தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட... மேலும் பார்க்க

திமுக உறுப்பினா்கள் சோ்க்கையை தீவிரப்படுத்த வேண்டும்: ராஜேஸ்குமாா் எம்.பி.

நாமக்கல்: நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில், வரும் நாள்களில் திமுக உறுப்பினா்கள் சோ்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் என மாவட்ட செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்தாா். நாம... மேலும் பார்க்க

ராசிபுரம் திருவள்ளுவா் அரசுக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கு பயிற்சி வகுப்பு

ராசிபுரம்: ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரியில் 2025 -26 ஆம் கல்வியாண்டில் சோ்ந்துள்ள முதலாமாண்டு மாணவ மாணவிகளுக்கான ஒருவார கால அறிமுக பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை தொடங்கியது. இந்நிகழ்ச்சிக்... மேலும் பார்க்க