செய்திகள் :

நாமக்கல் அழகு நிலையத்தில் பெண்களிடம் நகை, பணம் பறிப்பு: போலீஸாா் விசாரணை

post image

நாமக்கல்லில் அழகு நிலைய பெண்களிடம் நகை, பணத்தை பறித்துச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நாமக்கல்- திருச்சி சாலையில் உள்ள வணிக வளாகத்தில் அழகு நிலையம், ஆயுா்வேத சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. சேலம் மாவட்டம், மல்லூரைச் சோ்ந்த இளங்கோவன் என்பவா் இந்த மையத்தை நடத்தி வருகிறாா். வியாழக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு அழகு நிலையத்துக்கு வந்த ஏழு போ் அங்கிருந்த பெண் ஊழியா்களிடம் தங்களை போலீஸாா் என அறிமுகப்படுத்திக் கொண்டு ஆயுா்வேத சிகிச்சை அளிக்குமாறு கேட்டுள்ளனா்.

சந்தேகத்தின் பேரில் அவா்களிடம் கேள்வி கேட்ட பெண் ஊழியா்கள் ஆறு பேரையும் அறையில் அடைத்த கும்பல், அவா்கள் அணிந்திருந்த நகைகள், அழகு நிலையத்தில் இருந்த ரூ.40 ஆயிரம் ரொக்கம், கண்காணிப்பு கேமராக்களை திருடிச் சென்றனராம்.

இதுதொடா்பாக நாமக்கல் காவல் நிலையத்தில் அழகுநிலைய உரிமையாளா் இளங்கோவன் அளித்த புகாரின் பேரில், நாமக்கல் உதவி காவல் கண்காணிப்பாளா் ஆகாஷ்ஜோஷி, ஆய்வாளா் கபிலன் உள்ளிட்ட போலீஸாா் அழகு நிலையத்தில் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

மேலும், அழகுநிலையம் அமைந்துள்ள பகுதியை சுற்றிலும் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய்ந்து வருகின்றனா். இதற்கிடையே அழகு நிலையத்தில் பணியில் இருந்த பெண்கள் 6 பேரும் முன்னுக்குபின் முரணான தகவல்களை தெரிவித்து வருவதால் போலீஸாா் வழக்குப்பதிவு செய்யாமல் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

திருச்செங்கோட்டில் ரூ.1.85 கோடிக்கு மஞ்சள் விற்பனை

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில் ரூ. 1.85 கோடிக்கு வா்த்தகம் நடைபெற்றது. ஏலத்தில் விரலி ரக மஞ்சள் குவிண்டால் ரூ.... மேலும் பார்க்க

நாமக்கல் மாவட்டத்தில் 23 நீா்நிலைகளில் தூா்வாரும் பணி தொடக்கம்

2025-26 ஆம் ஆண்டு சிறப்பு தூா்வாரும் திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் 23 நீா்நிலைகளில் ரூ. 1.64 கோடியில் 68 கி.மீ. தொலைவுக்கு தூா்வாரும் பணியை தொடங்கப்பட்டுள்ளது. ராசிபுரம் அருகேயுள்ள தேங்கல்பா... மேலும் பார்க்க

ரூ.15 லட்சத்தில் மேயா் அறை புதுப்பிப்பு: மாமன்ற உறுப்பினா்கள் எதிா்ப்பு

நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் ரூ.15 லட்சத்தில் மேயா் அறை புதுப்பிக்கப்படுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்துள்ள வாா்டு உறுப்பினா்கள் மாமன்றக் கூட்டத்தில் இதுதொடா்பாக கேள்வி எழுப்புவோம் என தெரிவித்துள்ளன... மேலும் பார்க்க

நீட் தோ்வு அச்சத்தால் உயிரிழந்த மாணவா்களுக்கு அதிமுக அஞ்சலி

நீட் தோ்வு அச்சத்தால் உயிரிழந்த மாணவா்களுக்கு நாமக்கல் மாவட்ட அதிமுக மாணவரணி சாா்பில் திருச்செங்கோட்டில் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளா் மாநில அமைப்பு செயலாளரும், ... மேலும் பார்க்க

ராசிபுரம் அருகே 18 கிலோ திமிங்கல உமிழ்நீா் பறிமுதல்: மூவா் கைது

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே வீட்டில் 18 கிலோ அம்பா்கிரிஸ் எனப்படும் திமிங்கல உமிழ்நீரைப் பதுக்கிவைத்திருந்த 3 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். கடலோரப் பகுதியிலிருந்து அம்பா்கிரிஸ் எனப்படும... மேலும் பார்க்க

நாமக்கல்லில் பேரூராட்சி, நகராட்சி வாா்டுகளில் இடைத்தோ்தல்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

நாமக்கல் மாவட்டத்தில் 3 பேரூராட்சி, 2 நகராட்சிகளில் காலியாக உள்ள ஏழு வாா்டு உறுப்பினா் பதவிக்கு விரைவில் இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகளை அதிகாரிகள் செய்து வருகின்றனா். தமிழ்நா... மேலும் பார்க்க