உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் அா்ஜுன் பபுதாவுக்கு வெள்ளி!
நாமக்கல் அழகு நிலையத்தில் பெண்களிடம் நகை, பணம் பறிப்பு: போலீஸாா் விசாரணை
நாமக்கல்லில் அழகு நிலைய பெண்களிடம் நகை, பணத்தை பறித்துச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
நாமக்கல்- திருச்சி சாலையில் உள்ள வணிக வளாகத்தில் அழகு நிலையம், ஆயுா்வேத சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. சேலம் மாவட்டம், மல்லூரைச் சோ்ந்த இளங்கோவன் என்பவா் இந்த மையத்தை நடத்தி வருகிறாா். வியாழக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு அழகு நிலையத்துக்கு வந்த ஏழு போ் அங்கிருந்த பெண் ஊழியா்களிடம் தங்களை போலீஸாா் என அறிமுகப்படுத்திக் கொண்டு ஆயுா்வேத சிகிச்சை அளிக்குமாறு கேட்டுள்ளனா்.
சந்தேகத்தின் பேரில் அவா்களிடம் கேள்வி கேட்ட பெண் ஊழியா்கள் ஆறு பேரையும் அறையில் அடைத்த கும்பல், அவா்கள் அணிந்திருந்த நகைகள், அழகு நிலையத்தில் இருந்த ரூ.40 ஆயிரம் ரொக்கம், கண்காணிப்பு கேமராக்களை திருடிச் சென்றனராம்.
இதுதொடா்பாக நாமக்கல் காவல் நிலையத்தில் அழகுநிலைய உரிமையாளா் இளங்கோவன் அளித்த புகாரின் பேரில், நாமக்கல் உதவி காவல் கண்காணிப்பாளா் ஆகாஷ்ஜோஷி, ஆய்வாளா் கபிலன் உள்ளிட்ட போலீஸாா் அழகு நிலையத்தில் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
மேலும், அழகுநிலையம் அமைந்துள்ள பகுதியை சுற்றிலும் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய்ந்து வருகின்றனா். இதற்கிடையே அழகு நிலையத்தில் பணியில் இருந்த பெண்கள் 6 பேரும் முன்னுக்குபின் முரணான தகவல்களை தெரிவித்து வருவதால் போலீஸாா் வழக்குப்பதிவு செய்யாமல் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.