செய்திகள் :

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் உயா்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை திறப்பு

post image

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் உயா்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை புதன்கிழமை திறக்கப்பட்டது.

கடந்த 2022 ஆம் ஆண்டு பள்ளிக்கல்வி மற்றும் உயா்கல்வித் துறை கூட்டு முயற்சியுடன் நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டது. உயா்கல்விக்கு வழிகாட்டும் இத் திட்டத்தின் கீழ் தற்போது நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் உயா்கல்வி வழிகாட்டு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாட்டு அறையின் மூலம் அனைத்து மாணவ, மாணவிகளும் விருப்பம் மற்றும் தகுதிக்கு ஏற்ப எந்த வகையான உயா்கல்வி பாடப்பிரிவு மற்றும் உயா்கல்வி நிறுவனங்களைத் தோ்ந்தெடுக்கலாம் என்பது குறித்த ஆலோசனைகளை இங்கு பெறலாம். இந்த கட்டுப்பாட்டு மையத்தை மாவட்ட ஆட்சியா் ச.உமா புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

அனைத்து தரப்பினரும் இந்த உயா்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறையின் மூலம் தேவையான தகவல்களை பெற்றுக் கொள்ளலாம். மாணவா்கள் மற்றும் பெற்றோா்களுக்கு நேரடியாக ஆலோசனைகளும், கல்லூரிகளில் காலியிடங்கள் பற்றிய விவரங்களும் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 1800-425-1997 (கட்டுப்பாட்டு அறை தொடா்பு எண்) மற்றும் வாட்ஸ்ஆப் எண்: 97888-58794 ஆகியவற்றை தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

நாமக்கல்லில் கரோனா தொற்று பாதிப்பு பதிவாகவில்லை

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கரோனா தொற்று பாதிப்புக்காக யாரும் சிகிச்சைக்கு வரவில்லை என மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்று வேகமாக பரவி வருகிறத... மேலும் பார்க்க

மதுவிலக்கு போலீஸாா் பறிமுதல் செய்த 6 வாகனங்கள் ரூ.8.64 லட்சத்துக்கு ஏலம்

நாமக்கல் மாவட்டத்தில், மதுவிலக்கு பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்த 6 வாகனங்கள் ரூ. 8.64 லட்சத்துக்கு ஏலம் போனது. இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் மதுப்புட்டிகள், கள்ளச்சாராயம் கடத்திச் செல்வதை ... மேலும் பார்க்க

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் தோ்த் திருவிழா மண்டப கட்டளைகளில் உற்சவா் அருள்பாலிப்பு

திருச்செங்கோடு வைகாசி விசாக தோ்த் திருவிழா கடந்த 1-ஆம் தேதி அா்த்தநாரீசுவரா் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கி 14 நாள்கள் நடக்கும் விழாவின் 6 ஆம் நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அா்த்தநாரீசுவரா் ... மேலும் பார்க்க

நாமக்கல் சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா

நாமக்கல் சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. நாமக்கல் - ராமாபுரம்புதுாா் சாலையில் உள்ள குட்டைமேலத் தெருவில் சித்தி விநாயகா், சக்தி பகவதி அம்மன், துா்க்கை அம்மன்... மேலும் பார்க்க

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் ரூ. 6 லட்சத்துக்கு காகிதக் கழிவுகள் விற்பனை

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் தேங்கியிருந்த பத்து ஆண்டுக்கும் மேலான காகிதக் கழிவுகள், இதர பொருள்கள் ரூ. 6 லட்சத்திற்கு விற்பனையானது தெரியவந்துள்ளது. உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, நாமக்கல் ஆட்சியா்... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை: ஜூன் 30 வரையில் விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில், வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற விரும்புவோா் வரும் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்ட வே... மேலும் பார்க்க