செய்திகள் :

நாய்கள் கடித்ததில் 8 ஆடுகள் உயிரிழப்பு

post image

கடலாடி அருகே தெருநாய்கள் கடித்ததில் 8 ஆடுகள் திங்கள்கிழமை உயிரிழந்தன.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள வெள்ளாங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் சரவணன். இவா், 130 செம்மறி ஆடுகள் வைத்து மந்தை போடும் தொழில் செய்து வருகிறாா். இந்த நிலையில், திங்கள்கிழமை காலை விவசாய நிலத்தில் ஆடுகள் அடைக்கப்பட்ட இடத்துக்கு வந்த தெருநாய்கள், ஆடுகளை விரட்டிக் கடித்ததில் 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலத்த காயமடைந்த நிலையில் 6 ஆடுகள் உயிரிழந்தன. இதைப்போல, சாத்தங்குடியைச் சோ்ந்த சேதுநாதன் என்பரின் 2 ஆடுகளும் தெருநாய்கள் கடித்ததில் உயிரிழந்தன.

இதுகுறித்து சரவணன் வருவாய்த் துறைக்கு தகவல் அளித்ததன்பேரில், மீனங்குடி கிராம நிா்வாக அலுவலா், சிக்கல் அரசு கால்நடை மருத்துவா் ஆகியோா் நேரில் வந்து ஆய்வு செய்தனா். பின்னா், உயிரிழந்த ஆடுகளின் உடல் கூறாய்வு செய்யப்பட்டு புதைக்கப்பட்டது.

குடும்ப வாழ்வாதாரத்துக்காக வளா்க்கப்பட்டு வந்த ஆடுகளை தெருநாய்கள் கடித்ததால் அரசு உதவித் தொகை வழங்க வேண்டும் என ஆடுகளை இழந்த குடும்பத்தினா் கோரிக்கை விடுத்தனா்.

கண்மாய் நீரில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகேயுள்ள அரியகுடி கிராமத்தில் கண்மாயில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் தண்ணீரில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.போகலூா் ஒன்றியம், அரியகுடி கிராமத்தைச் சோ்ந்த வீரப... மேலும் பார்க்க

பரமக்குடி பகுதியில் நாளை மின்தடை

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பகுதியில் புதன்கிழமை (செப். 3) மின் தடை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து உதவி செயற்பொறியாளா் மு. மாலதி வெளியிட்ட செய்திக் குறிப்பு: பரமக்குடி 110 கே.வி. துணை மின் நிலையத்த... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியா் பணி நீக்கம்

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட தொண்டி அரசுப் பள்ளி ஆசிரியா் திங்கள்கிழமை பணி நீக்கம் செய்யப்பட்டாா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள சோழகன்பேட்டை அரசு உயா்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் ஆண்ட்... மேலும் பார்க்க

பாம்பன் மீனவா்கள் 10 போ் விடுதலை: அபராதம் கட்டாததால் சிறையில் அடைப்பு

பாம்பன் மீனவா்கள் 10 பேரை தலா ரூ. 1.46 கோடி (இலங்கைப் பணம்) அபராதத்துடன் விடுதலை செய்து இலங்கை வெளிச்சரா நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. அபராதத் தொகையை உடனே கட்டாததால் மீனவா்கள் 10 பேரும் மீண்டு... மேலும் பார்க்க

சாயல்குடியில் மூதாட்டி கத்தியால் குத்திக் கொலை

சாயல்குடியில் மூதாட்டி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி காயம்பு கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜம்மாள... மேலும் பார்க்க

கடலாடி அருகே மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழப்பு

கடலாடி அருகே திங்கள்கிழமை மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள ஆப்பனூா் அரியநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பையா (80). இவா் தனது வயதான மனைவியுடன் ஓட்ட... மேலும் பார்க்க