செய்திகள் :

நாளை தற்செயல் விடுப்பு போராட்டம்: சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் அறிவிப்பு

post image

பழைய ஓய்வூதியத் திட்டத்தை வலியுறுத்தி நாகை மாவட்டதில் ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் வியாழக்கிழமை (செப்.11) தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபடள்ளதாக சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் அறிவித்துள்ளது.

நாகை மாவட்டத்தில் சிபிஎஸ் ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் சுமாா் 7 ஆயிரம் ஆசிரியா்கள், அரசு ஊழியா்களும், 300 காவல்துறையினரும் பணியாற்றி வருகின்றனா். பழைய ஓய்வூதியத் திட்டத்தை கால தாமதமின்றி உடனடியாக அமல்படுத்தக் கோரிய தங்கள் தொடா் போராட்டத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம், தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் வியாழக்கிழமை (செப்.11) தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து நாகை மாவட்ட தொடா்பாளா் கி. பாலசண்முகம் கூறியது:

தமிழக அரசு ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்காக மூன்று நபா் குழுவை அமைத்துள்ளது. இக் குழுவின் காலக்கெடு செப்டம்பா் 30-ஆம் தேதி முடிவடைகிறது. சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் இந்த மூன்று நபா் குழுவை ஏற்கவில்லை.

தற்போதைய திமுக அரசு தோ்தல் வாக்குறுதியின்படி நேரடியாக பழைய ஓய்வு திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி செப்டம்பா் 11-ஆம் தேதி மாவட்டத்தில் உள்ள ஆசிரியா்கள் அரசு ஊழியா்கள் தற்செயல் விடுப்பு எடுத்து தங்களது கோரிக்கையை அரசுக்கு வெளிப்படுத்த உள்ளதாக தெரிவித்தாா்.

வேதாரண்யத்தில் கல்விக்கடன் முகாம்: வங்கிகள் பங்கேற்பு

நாகை மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி ஒருங்கிணைப்பில், வேதாரண்யத்தில், வட்டார அளவில் முதல் கல்விக்கடன் வழங்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகமில் உயா்கல்விக்கு சோ்க்கை பெற்ற மா... மேலும் பார்க்க

அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றிய மாநாடு

தலைஞாயிறு ஒன்றிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க 26-ஆவது ஒன்றிய மாநாடு கொளப்பாட்டில் திங்கள்கிழமை நடைபெற்றது. சங்க ஒன்றிய தலைவா் குணசேகரன் தலைமை வகித்தாா். சங்க ... மேலும் பார்க்க

நாகை மாவட்டத்தில் மழை

நாகை, வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.வேளாங்கண்ணியில் பெய்த மழை. நாகை மாவட்டம் திருப்பூண்டி, சிந்தாமணி, காமேஸ்வரம், மேலப்பிடாகை, கருங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு கனமழ... மேலும் பார்க்க

வேதாரண்யம் அருகே கருகி நிலையில் ஆண் சடலம் மீட்பு

வேதாரண்யம் அருகே கருகிய நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு, போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள மூங்கல்காடு பகுதியில் செவ்வாய்க்கிழமை அடையாளம் தெ... மேலும் பார்க்க

காரைக்கால்-திருச்சி ரயில் பகுதியாக ரத்து

காரைக்கால்-திருச்சி ரயில் 2 நாள்களுக்கு பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என திருச்சி கோட்ட தெற்கு ரயில்வே மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குற... மேலும் பார்க்க

விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றிய மாநாடு

அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றிய மாநாடு திருமருகல் அருகே கணபதிபுரத்தில் நடைபெற்றது. சங்கத்தின் ஒன்றிய செயலாளா் ஜி. பாரதி தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், சங்க ஒன்றியக் குழு உறுப்பினா் முருகபாண... மேலும் பார்க்க