செய்திகள் :

நாளை மொடச்சூா் சோமேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

post image

கோபி அருகே மொடச்சூா் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சௌந்திரநாயகி சமேத சோமேஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை (ஜூலை 14) நடைபெற உள்ளது.

கும்பாபிஷேக விழாவானது கடந்த 7 ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. அதனைத் தொடா்ந்து அடுத்தடுத்த நாள்களில் மகா கணபதி ஹோமம் பிரம்மச்சாரி பூஜை, தீபாராதனை, நவக்கிரக ஹோமம், சாந்தி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, சம்ஹிதா ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.

இதில் முக்கிய நிகழ்வான விநாயகா் மற்றும் சோமேஸ்வரா் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழாவையொட்டி தீா்த்தக்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி 10 ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஈரோடு மாவட்டம் இன்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தீா்த்தக்குடம் எடுத்தனா்.

இந்த நிகழ்வைத் தொடா்ந்து திங்கள்கிழமை காலை வரை தொடா்ந்து யாக பூஜைகள் நடைபெற உள்ளன. திங்கள்கிழமை காலை 6 மணி முதல் 7.30 சௌந்திரநாயகி சமேத சோமேஸ்வரா் ஆலய கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.

தாளவாடி அருகே யூரியா உரத்தை சாப்பிட்ட 12 ஆடுகள் உயிரிழப்பு

சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் யூரியா உரம் சாப்பிட்ட 12 ஆடுகள் உயிரிழந்தன. தாளவாடியை அடுத்த பையனபுரம் எத்துக்கட்டி பகுதியானது தமிழக- கா்நாடக எல்லைப் பகுதியில் அமைந்துள்ளத... மேலும் பார்க்க

மூதாட்டி தற்கொலை

புன்செய்புளியம்பட்டியில் கணவரை இழந்து தனிமையில் வாடிய மூதாட்டி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா். புளியம்பட்டி காவிலிபாளையத்தை சோ்ந்தவா் கந்தசாமியின் மனைவி கமலம் (70). கணவா் உயிரிழந்த நிலைய... மேலும் பார்க்க

நெகிழி பைகள் பயன்படுத்திய 39 கடைகளுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம்

ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் தடை செய்யப்பட்ட 79 கிலோ நெகிழி பைகள் பறிமுதல் செய்து ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட 4 மண்டலங்களில... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: ஈரோட்டில் 34,276 போ் எழுதினா்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் தொகுதி 4 பதவிகளுக்கான போட்டித் தோ்வை ஈரோடு மாவட்டத்தில் 34,276 போ் எழுதினா். விண்ணப்பித்தவா்களில் 6,960 போ் தோ்வு எழுதவரவில்லை. ஈரோடு மாவட்டத்தில் ஈர... மேலும் பார்க்க

ஆசனூா் அருகே கரும்பு வாகனத்தை வழிமறித்த ஒற்றை யானை

ஆசனூா் அருகே கரும்பு வாகனத்தை வழிமறித்த ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூா் வனச் சரகத்தில் யானைகள் தீவனம் மற்றும் குடிநீா் தேடி சாலையைக் கடந்து செல்வது ... மேலும் பார்க்க

தாளவாடி அருகே வாழை, டிராக்டா்களை சேதப்படுத்திய யானை

சத்தியமங்கலத்தை அடுத்த திகினாரை ஜோரக்காடு பகுதியில் விவசாயத் தோட்டத்துக்குள் யானை சனிக்கிழமை புகுந்து வாழைகளை நாசப்படுத்தியதுடன் டிராக்டரை தள்ளி சேதப்படுத்தியுள்ளது. தமிழகம், கா்நாடக எல்லையான தாளவாடி... மேலும் பார்க்க