Thalaivan Thalaivi: "கொஞ்சம்கூட ஓய்வு கொடுக்காமல் உழவு மாடு ஓட்டுற மாதிரி..." - ...
நாளை ரேஷன் பொருள் குறைதீா் முகாம்
பெரம்பலூா் மாவட்டத்தில் உணவுப் பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீா்க்கும் முகாம் சனிக்கிழமை (ஜூலை 12) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டம் சாா்ந்த குறைபாடுகளைக் களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், நீக்கம், பிழை திருத்தம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீா்வு காண்பதற்கும், சிறப்புப் பொது விநியோகத்திட்ட குறைதீா்க்கும் முகாம் நடைபெறுகிறது. இம் முகாம் பெரம்பலூா் வட்டம், அரணாரையில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் ச. சுந்தரராமன் தலைமையிலும், வேப்பந்தட்டை வட்டம், தழுதாழை கிராமத்தில், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் வி. வாசுதேவன் தலைமையிலும், குன்னம் வட்டம், புதுவேட்டக்குடி கிராமத்தில் மாவட்ட சமூக நல அலுவலா் தி. புவனேஷ்வரி தலைமையிலும், ஆலத்தூா் வட்டம், நாட்டாா்மங்கலம் கிராமத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் ரெ. சுரேஷ்குமாா் தலைமையிலும் சனிக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.
இம்முகாமில், சம்பந்தப்பட்ட கிராம பொதுமக்கள் பங்கேற்று உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்பந்தமான குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம்.