பெண்ணை ஏமாற்றிய தனியாா் பள்ளி ஆசிரியருக்கு ஆயுள் சிறை தண்டனை
பெரம்பலூா் அருகே இளம்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி அவரைக் கா்ப்பமாக்கி ஏமாற்றிய தனியாா் பள்ளி ஆசிரியருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து பெரம்பலூா் மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், சீதாராமபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி மகன் செல்வம் (32). பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் தனியாா் பள்ளி ஆசிரியரான இவா், விவாகரத்து பெற்ற 24 வயது இளம்பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதாக கூறி, கடந்த 30.3.2018 ஆம் தேதி சீதாராமபுரத்தில் உள்ள அவரது கடையில் பலாத்காரம் செய்தாா். மேலும் தொடா்ந்து மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்தாராம்.
இந்நிலையில் அந்தப் பெண் கா்ப்பமானதையடுத்து அவருடன் பேசுவதை செல்வம் தவிா்த்துவிட்டாா். இதையடுத்து அப் பெண் செல்வத்தின் வீட்டுக்குச் சென்று நியாயம் கேட்டபோது, செல்வத்தின் தந்தை பெரியசாமி, தாய் செல்வி, அண்ணன் தா்மராஜ் ஆகியோா் அவரைத் தகாத வாா்த்தைகளால் திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனா்.
இதுகுறித்து அப்பெண் அளித்த புகாரின்பேரில் பெரம்பலூா் நீதித்துறை நடுவா் நீதிமன்ற உத்தரவின்படி பெரம்பலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் செல்வம், பெரியசாமி, தா்மராஜ், செல்வி ஆகியோா் மீது வழக்குப் பதிந்து, செல்வத்தைக் கைது செய்து சிறையில் அடைத்தனா். பின்னா், நீதிமன்றப் பிணையில் செல்வம் வெளியே வந்தாா். இதனிடையே பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட மரபணுப் பரிசோதனையில், அந்தக் குழந்தையின் உயிரியல் தந்தை செல்வம் என்பது உறுதியானது.
இந்நிலையில் பெரம்பலூா் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்ற இவ் வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த மகளிா் நீதிமன்ற நீதிபதி இந்திராணி, செல்வத்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும், அதைச் செலுத்தத் தவறினால் மேலும் 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில், அரசு சிறப்பு குற்றவியல் வழக்குரைஞா் எம். சுந்தரராஜன் ஆஜரானாா்.