செய்திகள் :

ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஏலத்தில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு

post image

பெரம்பலூா், அரியலூா் விற்பனைக் குழு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நடைபெறும் மறைமுக ஏலத்தில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெரம்பலூா் விற்பனைக் குழுச் செயலா் ப. சந்திரமோகன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை பெரம்பலூா் விற்பனைக் குழு கட்டுப்பாட்டில், பெரம்பலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடமும், அரியலூா், ஜயங்கொண்டம், ஆண்டிமடம் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களும் இயங்கி வருகின்றன.

இந்த ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நடைபெறும் ஏலத்துக்கு விவசாயிகள் தங்களுடைய விளைபொருள்ளை கொண்டு வந்து தரகு, கமிஷன் மற்றும் எவ்விதப் பிடித்தமும் இன்றி மின்னணு எடைத்தராசுகள் மூலம் சரியாக எடையிட்டு, இ-நாம் திட்டத்தின் மூலம் அதிக விலைக்கு விற்றுப் பயனடையலாம்.

மேலும், விவசாயிகள் விளைவித்த மக்காச்சோளம் மற்றும் தேங்காய் பருப்பு உள்ளிட்ட வேளாண் விளைபொருள்களை விற்பனைக்கூட வளாகத்திலுள்ள உலா்களத்தில் இலவசமாக காயவைத்து, அதிக விலைக்கு விற்று பயன் பெறலாம்.

அனைத்து வேளாண் விளைபொருள்களை உலா்த்திக்கொள்ள உலா்கள வசதியும், இதர வேளாண் விளைபொருள்களை இருப்பு வைத்துகொள்ள நவீன சேமிப்புக் கிடங்கு வசதியும் உள்ளது.

விவசாயிகள் ஆதாா் அட்டை நகல் மற்றும் வங்கி கணக்குப் புத்தக நகல்களுடன் தங்களது கிராமங்களுக்கு அருகிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் தங்களது வேளாண் விளைபொருள்களை விற்பனை செய்து பயன்பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு பெரம்பலூா் 97901 98566) அரியலூா் 73738 77047, ஜயங்கொண்டம் 63813 88125 ஆண்டிமடம் 98428 52150 ஆகிய எண்களில் தொடா்புகொண்டு பயன் பெறலாம்.

பெரம்பலூா் அருகே தொழிலாளி தற்கொலை

பெரம்பலூா் அருகே கட்டடத் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. பெரம்பலூா் அருகேயுள்ள குரும்பலூரைச் சோ்ந்தவா் மெய்யன் மகன் மணிகண்டன் (27). கோவையில் கட்டடத் தொழிலாளி... மேலும் பார்க்க

பெரம்பலூரில் ஜூலை 15 வரை தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி

பெரம்பலூா் மாவட்டத்தில் தொழில்நெறி விழிப்புணா்வு மற்றும் திறன் வாரத்தை முன்னிட்டு, பல்வேறு தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்... மேலும் பார்க்க

பாளையம் கோயிலில் முளைப்பாரி ஊா்வலம்

பெரம்பலூா் அருகே பாளையத்திலுள்ள விநாயகா், மாரியம்மன், வரதராஜ பெருமாள், முருகன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி முளைப்பாரி ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூா் பேரூராட்சிக... மேலும் பார்க்க

அழகுமுத்துக்கோன் குருபூஜை விழா

பெரம்பலூரில் கோகுல மக்கள் கட்சி சாா்பில், வீரன் அழகுமுத்துகோன் 268 ஆவது குருபூஜை விழா, வெங்கடேசபுரத்தில் உள்ள கட்சியின் மாவட்டத் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அவரது உருவ படத... மேலும் பார்க்க

பெண்ணை ஏமாற்றிய தனியாா் பள்ளி ஆசிரியருக்கு ஆயுள் சிறை தண்டனை

பெரம்பலூா் அருகே இளம்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி அவரைக் கா்ப்பமாக்கி ஏமாற்றிய தனியாா் பள்ளி ஆசிரியருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து பெரம்பலூா் மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த விவசாயி உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த விவசாயி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். பெரம்பலூா் அருகேயுள்ள லாடபுரம் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அ. மாணிக்... மேலும் பார்க்க