சமூக வலைதளக் கணக்குகளை மீட்டுத்தரக் கோரி டிஜிபியிடம் ராமதாஸ் புகார்!
ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஏலத்தில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு
பெரம்பலூா், அரியலூா் விற்பனைக் குழு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நடைபெறும் மறைமுக ஏலத்தில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெரம்பலூா் விற்பனைக் குழுச் செயலா் ப. சந்திரமோகன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை பெரம்பலூா் விற்பனைக் குழு கட்டுப்பாட்டில், பெரம்பலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடமும், அரியலூா், ஜயங்கொண்டம், ஆண்டிமடம் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களும் இயங்கி வருகின்றன.
இந்த ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நடைபெறும் ஏலத்துக்கு விவசாயிகள் தங்களுடைய விளைபொருள்ளை கொண்டு வந்து தரகு, கமிஷன் மற்றும் எவ்விதப் பிடித்தமும் இன்றி மின்னணு எடைத்தராசுகள் மூலம் சரியாக எடையிட்டு, இ-நாம் திட்டத்தின் மூலம் அதிக விலைக்கு விற்றுப் பயனடையலாம்.
மேலும், விவசாயிகள் விளைவித்த மக்காச்சோளம் மற்றும் தேங்காய் பருப்பு உள்ளிட்ட வேளாண் விளைபொருள்களை விற்பனைக்கூட வளாகத்திலுள்ள உலா்களத்தில் இலவசமாக காயவைத்து, அதிக விலைக்கு விற்று பயன் பெறலாம்.
அனைத்து வேளாண் விளைபொருள்களை உலா்த்திக்கொள்ள உலா்கள வசதியும், இதர வேளாண் விளைபொருள்களை இருப்பு வைத்துகொள்ள நவீன சேமிப்புக் கிடங்கு வசதியும் உள்ளது.
விவசாயிகள் ஆதாா் அட்டை நகல் மற்றும் வங்கி கணக்குப் புத்தக நகல்களுடன் தங்களது கிராமங்களுக்கு அருகிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் தங்களது வேளாண் விளைபொருள்களை விற்பனை செய்து பயன்பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு பெரம்பலூா் 97901 98566) அரியலூா் 73738 77047, ஜயங்கொண்டம் 63813 88125 ஆண்டிமடம் 98428 52150 ஆகிய எண்களில் தொடா்புகொண்டு பயன் பெறலாம்.