செய்திகள் :

நிபா பாதிப்பு? கேரளத்தில் 2-ஆவது உயிரிழப்பு

post image

கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் ‘நிபா’ தீநுண்மி தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 57 வயது நபா் ஒருவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

முன்னதாக நிபா தொற்றால் பாதிக்கப்பட்ட மலப்புரத்தைச் சோ்ந்த நபா் ஒருவா் உயிரிழந்தாா். இந்நிலையில், தற்போது இரண்டாவது நபா் உயிரிழந்துள்ளாா்.

இதையடுத்து, அவருடன் தொடா்பில் இருந்த 46 நபா்களை கண்டறிந்து பரிசோதனைகளை மேற்கொள்ளும் பணியை மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது. கைப்பேசி டவா்களில் இருந்து பெறப்பட்ட தரவுகளைக் கொண்டு உயிரிழந்த நபரிருடன் தொடா்பில் இருந்தவா்களின் வசிப்பிடங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் இந்தப் பணியை அரசு மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து மாநில சுகாதார அமைச்சா் வீணா ஜாா்ஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இதுவரை நிபா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் என மொத்தம் 543 போ் கண்டறியப்பட்டுள்ளனா். அவா்களில் 46 போ் தற்போது உயிரிழந்த 57 வயது நபருடன் தொடா்பில் இருந்தது தெரியவந்தது. உயிரிழந்த நபரின் ரத்த மாதிரிகள் மஞ்சேரி மருத்துவக் கல்லூரியில் பரிசோதனை செய்யப்பட்டபோது அவருக்கு நிபா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து, அவரது ரத்த மாதிரிகள் புணேயில் உள்ள தேசிய தீநுண்மியியல் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அங்கிருந்த அறிக்கைகள் பெறப்பட்ட பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் ’ எனத் தெரிவிக்கப்பட்டது.

கேரளத்தில் புதியதாக மற்றொரு நிபா பாதிப்பு?

கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தில், புதியதாக ஒருவருக்கு நிபா பாதிப்பு ஏற்பட்டிருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படுவதாக அம்மாநில சுகாதாரத் துறை இன்று (ஜூலை 16) தெரிவித்துள்ளது. பாலக்காடு மாவட்டத்தி... மேலும் பார்க்க

4-ஆம் வகுப்பு மாணவிக்கு இருமுறை மாரடைப்பு! பள்ளியில் மயங்கி விழுந்து பலி!

4-ஆம் வகுப்பு மாணவியொருவர் பள்ளியில் உணவருந்தும்போது இருமுறை மாரடைப்பு ஏற்பட்டதால் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானின் சிகார் பகுதியிலுள்ள ஒரு ... மேலும் பார்க்க

மணிப்பூரில் வீடுகளுக்குத் திரும்ப முயற்சிக்கும் மக்கள்! தடுக்கும் பாதுகாப்புப் படைகள்!

மணிப்பூர் மாநிலத்தில் உள்ளூரிலேயே இடம்பெயர்ந்த 100-க்கும் அதிகமான மக்களைத் தங்களது வீடுகளுக்குத் திரும்பவிடாமல் பாதுகாப்புப் படையினர் தடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மணிப்பூரில் நடைபெற்ற வன்முறையால்,... மேலும் பார்க்க

மரண தண்டனையிலிருந்து நிமிஷா பிரியா விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது...

யேமன் நாட்டில் சிறையிலிருக்கும் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவைக் காப்பாற்ற இன்னும் சில சாத்தியக் கூறுகள் இருப்பதாக அவர் தரப்பில் போராடும் வழக்குரைஞர் தெரிவித்திருக்கிறார். நிமிஷா பிரியா தரப்பில் வாதாட... மேலும் பார்க்க

ராகுலின் ரே பரேலி பயணம் ரத்து: காங்கிரஸ் அறிவிப்பு!

காங்கிரஸ் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் சொந்தத் தொகுதியான ரே பரேலிக்கு அவர் மேற்கொள்ள திட்டமிடப்பட்ட பயணம், தற்போது ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. உத்தரப்... மேலும் பார்க்க

பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மக்களுக்கு பாதுகாப்பில்லை! -மம்தா பானர்ஜி

கொல்கத்தா: பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மக்களுக்கு பாதுகாப்பில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மக்களை பாஜக குறிவைத்து நடவடிக்கை எடுப்பதாக... மேலும் பார்க்க