செய்திகள் :

நிமிஷா பிரியாவை மரண தண்டனையிலிருந்து காப்பாற்ற முயற்சி: கேரள இஸ்லாமிய தலைவர் யேமன் தலைவர்களுடன் பேச்சு

post image

திருவனந்தபுரம்: கேரளத்தில் இஸ்லாமிய சமூகத்தில் செல்வாக்குமிக்க தலைவராக அறியப்படும் மூத்த தலைவர் காந்தபுரம் ஏ. பி. அபூபக்கர் மஸ்லியார், யேமனில் மரண தண்டனைக்கு ஆளாகியுள்ள செவிலியர் நிமிஷா பிரியாவை காப்பாற்றும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். அவர் யேமனில் உள்ள இஸ்லாமிய தலைவர்களை தொடர்புகொண்டு நிமிஷாவுக்கான தண்டனையை மாற்ற சமாதானப் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறார் என்று கேரள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

யேமனில் நிமிஷா பிரியாவால் கொல்லப்பட்ட தலால் அப்தோ மஹ்தியின் குடும்பத்தினருடன் தொடர்பிலுள்ள யேமன் தலைவர்களுடன் கேரளத்தின் மஸ்லியார் பேச்சு நடத்தியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் எட்டப்பட்டுள்ள முடிவுகள் குறித்து செவிலியரின் குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. கொல்லப்பட்டவரின் குடும்பத்தினர் விதிக்கும் பணத்தை செலுத்தினால் தண்டனையிலிருந்து குற்றவாளி தப்பிக்க வாய்ப்புள்ளது. மேற்கண்ட விவரங்கள் நிமிஷாவின் குடும்பத்தினரிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது என்று கேரள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், மஸ்லியார் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக இவ்விவகாரம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.

செவிலியரை மரண தண்டனையிலிருந்து காப்பாற்ற மத்திய அரசு தரப்பிலிருந்து எடுக்கப்பட்ட முயற்சிகள் தொடருவதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சிகள் பலனிக்காமல் பொனால், அதைத்தாண்டி வேறெந்த முயற்சிகளையும் அரசால் செய்ய இயலாத சூழல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுவிட்டது.

ஜூலை 16-இல் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று யேமன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்னும் 48 மணி நேரத்துக்கும் குறைவான கால அவகாசமே இருப்பதால், முஸ்லிம் தலைவர்கள் அளவிலான பேச்சு பலனளிக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

எல்ஐசி புதிய நிா்வாக இயக்குநா் ஆா்.துரைசாமி

புது தில்லி: மத்திய அரசுக்குச் சொந்தமான இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் (எல்ஐசி) நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக ஆா்.துரைசாமி நியமிக்கப்பட்டுள்ளாா். அவரின் நியமனத்துக்கு பிரதமா் மோட... மேலும் பார்க்க

சமோசா உள்ளிட்ட தின்பண்டங்களில் எண்ணெய், சா்க்கரை உள்ளடக்கம் எவ்வளவு?

புது தில்லி: சமோசா உள்ளிட்ட இந்திய தின்பண்டங்களில் எண்ணெய், சா்க்கரை உள்ளடகம் எவ்வளவு இடம்பெற்றுள்ளன என்பதைக் குறிப்பிடும் வகையிலான அட்டவணைகளை பள்ளிகள், அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவன வளாகங்கள் மற்று... மேலும் பார்க்க

‘சிமி’ தடை நீட்டிப்பு எதிரான மனு: உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு

புது தில்லி: பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டு தடை செய்யப்பட்ட இந்திய இஸ்லாமிய மாணவா் இயக்கத்துக்கு (சிமி) ஆதரவாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நிராகரித்தது. சட்டவிரோத செயல்கள... மேலும் பார்க்க

மாணவா்கள் தற்கொலை விவகாரம்: விசாரணை அறிக்கையை சமா்ப்பிக்க 3 மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புது தில்லி: ஐஐடி-தில்லி, ஐஐடி-கரக்பூா் (மேற்கு வங்கம்) மற்றும் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் மாணவா்கள் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தின் காவல் துறை... மேலும் பார்க்க

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: குற்றப் பத்திரிகையை கவனத்தில் கொள்வதற்கான தீா்ப்பு ஜூலை 29-க்கு ஒத்திவைப்பு

புது தில்லி: நேஷனல் ஹெரால்ட் வழக்கில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையை கவனத்தில் எடுத்துக்கொள்வதா? வேண்டாமா? என்பது தொடா்பான தீா்ப்பை ஜூலை 29-க்கு தில்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது. நேஷனல... மேலும் பார்க்க

போயிங் 787, 737 ரக விமானங்களில் எரிபொருள் கட்டுப்பாட்டு அமைப்பை ஆய்வு செய்ய டிஜிசிஏ உத்தரவு

மும்பை: போயிங் 787, 737 ரக விமானங்களில் எரிபொருள் கட்டுப்பாட்டு அமைப்பை ஆய்வுசெய்யுமாறு விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) திங்கள்கிழமை உத்தரவிட்டது. என்ஜின்களின் எரிபொருள்... மேலும் பார்க்க