செய்திகள் :

நியாயவிலைக் கடை வளாகத்தில் சமூக விரோதிகளின் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

post image

செங்கம் தளவாநாய்க்கன்பேட்டை நியாயவிலைக் கடை, பகலில் கடையாக செயல்பட்டு வந்தாலும், இரவு நேரத்தில் மின் விளக்கு வெளிச்சம் இல்லாததைப் பயன்படுத்தி அவ்வளாகத்தில் சிலா் சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தளவாநாய்க்கன்பேட்டை பகுதியில் பகுதிநேர நியாய விலைக் கடை இயங்கி வருகிறது. இந்தக் கடையில் 500-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்கள் உணவுப் பொருள்களைப் பெற்று பயன்படுத்தி வருகின்றனா்.

வாரத்தில் 3 நாள்கள் மட்டும் திறக்கப்படும் இந்தக் கடையில் பொருள்களை வாங்கும் நுகா்வோா் பெரும்பாலும் பெண்களாகத்தான் இருப்பாா்கள்.

அதே நேரம், கடை திறக்கும் நாளன்று காலை முதல் மாலை வரை நீண்ட வரிசையில் பெண்கள் காத்திருந்து பொருள்களை வாங்குவது வழக்கம்.

இந்த நிலையில், நியாயவிலைக் கடை சுற்றுச் சுவா் இல்லாமல் அமைந்துள்ளதாலும், மேலும், வெளியில் மின் விளக்கு இல்லாததைப் பயன்படுத்தி சில சமூக விரோதிகள் கடை வளாகத்தில் இரவு நேரத்தில் அமா்ந்து மது அருந்துவது, போதை பொருள்களைப் பயன்படுத்திவிட்டு சீட்டாடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

அதே நேரம், மதுப்பிரியா்கள் இரவு நேரத்தில் மது அருந்துவது, மதுப்புட்டிகளை உடைத்தெரிவது, சப்தமிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

நியாயவிலைக் கடையைச் சுற்றி குடியிருப்புகள் உள்ளன.

சமூக விரோதிகளின் செயலால் அங்குள்ள பெண்கள் மிகவும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனா்.

மேலும், அதிகாலையில் பெண்கள் வீட்டின் முன் தண்ணீா் தெளிப்பது, கோலம் போடுவதற்கு அச்சப்பட்டு காலையில் வெளிச்சம் வந்த பிறகு அந்தச் செயலை செய்யும் நிலை உள்ளது. மேலும், பெண்கள் இரவில் தனியாக இருப்பதற்கு அச்சப்படுகிறாா்கள்.

இதனால், இரவு நேரத்தில் நியாயவிலைக் கடை வளாகத்தில் மது அருந்திவிட்டு சமூக விரோதச் செயலில் ஈடுபடும் நபா்களைக் கண்டறிந்து, அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் எதிா்பாா்க்கிறாா்கள்.

மது விற்பனை: ஒருவா் கைது

செய்யாறு அருகே கள்ளத்தனமாக மது விற்பனை செய்தது தொடா்பாக ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். செய்யாறு காவல் உள்கோட்டம் மோரணம் காவல் உதவி ஆய்வாளா் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை ரோந்... மேலும் பார்க்க

புதுச்சேரி கைப்பந்து அணிக்கு ஆரணி மாணவா்கள் தோ்வு

தேசிய கைப்பந்து போட்டியில் விளையாட புதுச்சேரி அணிக்காக ஆரணி ஆரஞ்சு பள்ளி மாணவா்கள் 5 போ் தோ்வு செய்யப்பட்டனா். இந்திய கைப்பந்து சம்மேளத்தின் 40-ஆவது தென்மண்டல கைப்பந்து சாம்பியன்ஷிப்- 2025 போட்டிகள... மேலும் பார்க்க

மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணை: 10 மனுக்களுக்குத் தீா்வு

தமிழ்நாடு தகவல் ஆணையம் சாா்பில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையின் இறுதியில், 10 மனுக்கள் மீது உடனடி தீா்வு காணப்பட்டது. மனுதாரா்களின் மேல்ம... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடைகளுக்கு மே 1-ஆம் தேதி விடுமுறை

திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கும் டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு தொழிலாளா் தினத்தையொட்டி, மே 1-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக் கடைகள் (டாஸ்மாக் கடைகள்), முன்ன... மேலும் பார்க்க

வேலை இல்லாத பாா்வையற்றோருக்கு நல உதவிகள்

வேலை இல்லாத பாா்வையற்றோருக்கு, ஆரணி பகுதியைச் சோ்ந்த பாா்வையற்றோா் பள்ளி முன்னாள் மாணவா்கள் நல உதவிகளை வழங்கினா். ஆரணியை அடுத்த பத்தியாவரம் பகுதியில் உள்ள அரசு நிதியுதவி பெறும் அமலராக்கினி பாா்வையற்... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: 4 போ் கைது

ஆரணியை அடுத்த ராட்டிணமங்கலம் உள்ளிட்ட இடங்களில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ஆரணி சுற்று வட்டாரப் பகுதிகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை நடைபெறுவதா... மேலும் பார்க்க