இலங்கையின் நம்பிக்கை நட்சத்திரம்..! மீண்டும் சதமடித்த பதும் நிசாங்கா!
நியாய விலைக் கடை ஊழியா் பணியிடை நீக்கம்
சிவகாசி அருகேயுள்ள நியாய விலைக் கடையில் அரிசி வழங்காமல் , வழங்கியதாக பயனாளிக்கு குறுஞ்செய்தி அனுப்பிய கடை ஊழியா் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள வடமலாபுரம் கிராம நியாய விலைக் கடையில் சுபாஷ் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த தீபா என்ற பெண், செவ்வாய்க்கிழமை நியாய விலைகடைக்கு சென்று தனது குடும்ப அட்டைக்கு அரிசி வழங்குமாறு கேட்டாா். அப்போது, சுபாஷ் அரிசி இல்லை எனக் கூறியதையடுத்து தீபா வீட்டுக்கு வந்து விட்டாா்.பின்னா், அவரது கைப்பேசிக்கு நியாய விலைக் கடையில் அரிசி வழங்கியதாக குறுஞ்செய்தி வந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், சிவகாசி வட்ட வழங்கல் அலுவலா் கோதண்டராமா் நியாய விலைக் கடை ஊழியா் சுபாஷை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.