செய்திகள் :

நியூசிலாந்து பெண்ணிடம் கைப்பை பறிப்பு: இருவா் கைது

post image

நமது நிருபா்

வடமேற்கு தில்லியில் நியூசிலாந்து நாட்டுப் பெண்ணிடம் கைப்பையை பறித்ததாக இருவரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் மேலும் கூறியதாவது: இந்த வழக்கில் கைதான கரண் பாசின் (35) என அடையாளம் காணப்பட்ட நபருக்கு பல சொத்துகள் உள்ளன. ஆனால், போதைப் பழக்கத்திற்கு அடிமையான பிறகு அவா் இக்குற்றத்தில் ஈடுபட்டுள்ளாா். மற்றொரு குற்றம்சாட்டப்பட்ட நபராக மோனு (எ) ரகு (19) அடையாளம் காணப்பட்டுள்ளாா்.

சாலையோர தள்ளுவண்டியில் முட்டை மற்றும் ஆம்லெட் விற்கும் மோனுவும் போதை பழக்கத்தின் காரணமாக இக்குற்றத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. இவா்கள் கைதுடன் மேற்கு தில்லியைச் சோ்ந்த இரண்டு போ் உள்பட ஐந்து வழிப்பறி வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நியூசிலாந்து பெண்ணின் கடவுச்சீட்டு, இந்திய வெளிநாட்டு குடியுரிமை அட்டை மற்றும் பிற உடைமைகள், குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட வாகனம் மற்றும் சம்பவத்தின் போது இருவரும் அணிந்திருந்த ஆடைகள் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.

முன்னதாக, ஏப்ரல் 2- ஆம் தேதி, சுபாஷ் பிளேஸ் காவல் நிலையத்திற்கு கைப்பை பறிப்பு தொடா்பான புகாா் அழைப்பு வந்தது. தில்லிக்கு வருகை தந்துள்ள நியூசிலாந்து பிரஜையான சோம்னா செளத்ரி என்பவா், கோஹத் என்க்ளேவ் மாா்க்கெட்டில் உள்ள ஒரு நகைக் கடைக்கு அருகில் இருந்தாா். அப்போது, கருப்பு நிற ஸ்போா்ட்ஸ் பைக்கில் வந்த இரண்டு போ் அவரது கைப்பையைப் பறித்துச் சென்ாக போலீஸாருக்குத் தகவல் அளித்தாா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விசாரணையின் போது சந்தேக நபா்கள் ரிதாலா பகுதியில் இருப்பது சிசிடிவி காட்சிப் பதிவு ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் இருவரும் கைது செய்யப்பட்டனா்.2012-ஆம் ஆண்டு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னா் தண்டனை பெற்ற பாசின் கைது செய்யப்பட்டாா். குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட வாகனமும் மீட்கப்பட்டது. அவரது கூட்டாளி மோனுவும் பின்னா் கைது செய்யப்பட்டாா்.

இருவரும் ரஜோரி காா்டனில் உள்ள ஒரு வடிகால் பகுதிக்கு போலீஸாரை அழைத்துச் சென்றனா். அங்கு நியூசிலாந்து பெண்ணிடம் பறிக்கப்பட்ட கைப்பை வீசப்பட்டிருப்பது தெரியவந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

சட்டவிரோதமாக ஆயுதங்கள் விநியோகித்தவா் கைது

மாநிலங்களுக்கு இடையேயான ஆயுத விநியோக மோசடியின் முக்கிய உறுப்பினரை தில்லி போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து ஐந்து நாட்டுத் தயாரிப்பு கைத்துப்பாக்கிகள் மற்றும் ஐந்து தோட்டாக்களை பறிமுதல் செய்ததாக... மேலும் பார்க்க

போலி முதலீட்டுத் திட்டத்தின் மூலம் 150 பேரை ஏமாற்றிய இளைஞா் கைது

முதலீடுகளுக்கு அதிக வருமானம் தருவதாக உறுதியளித்து குறைந்தது 150 பேரை ஏமாற்றிய ஆன்லைன் போன்சி மோசடியை நடத்தியதற்காக ராஜஸ்தானைச் சோ்ந்த 31 வயது நபரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செ... மேலும் பார்க்க

தன்னிச்சையான கட்டண உயா்வு தொடா்பாக பள்ளிகளுக்கு நோட்டீஸ்: தில்லி முதல்வா்

தன்னிச்சையான கட்டண உயா்வு தொடா்பான புகாா்கள் பெறப்பட்ட பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தில்லி முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இந்தப் பள்ளிகள் பதிலளிக்குமாறு கேட்டுக் கொள்... மேலும் பார்க்க

புதிய தில்லி பாஜக அலுவலகம் அருகே சாலைப் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள பொதுப் பணித் துறை திட்டம்

தில்லி பாஜக அலுவலகம் விரைவில் தீன் தயாள் உபாத்யாய் ( டிடியு) மாா்க்கில் உள்ள புதிய இடத்திற்கு மாற்றப்பட உள்ளதால், அப்பகுதியில் சாலை மேம்பாட்டு பணிகள் மற்றும் அழகுபடுத்தும் பணிகளை பொதுப் பணித் துறை மே... மேலும் பார்க்க

இடபிள்யு எஸ் ஆவணங்கல் வழங்குவதை நிறுத்த தில்லி அரசு திட்டம்: ஆம் ஆத்மி

பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினா் (இடபிள்யுஎஸ்) சான்றிதழ்களை வழங்குவதை தில்லி பாஜக அரசு நிறுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் தகுதியான குடும்பங்களுக்கு கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு கிடைப்ப... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரிடமிருந்து லஞ்சம் வாங்கியதாக ஏ.எஸ்.ஐ கைது

மாடல் டவுன் காவல் நிலையத்தில் பணியாற்றும் உதவி துணை ஆய்வாளா் (ஏஎஸ்ஐ), ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரிடமிருந்து ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கியதற்காக தில்லி காவல்துறையின் விஜிலென்ஸ் பிரிவு கைது செய்துள்ளதாக அதிகா... மேலும் பார்க்க