செய்திகள் :

நிலக்கடலை ஏலத்தை வெளிப்படையாக நடத்தக் கோரி விவசாயிகள் போராட்டம்

post image

சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலக்கடலை ஏலத்தை வெளிப்படையாக நடத்தக் கோரி விவசாயிகள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து விற்பனைக் கூட வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறியதாவது: சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற வெளிப்படை ஏலம் காரணமாக நிலக்கடலை கிலோ ரூ.90 வரை விற்பனையானது. தற்போது நடைபெற்று வரும் மறைமுக ஏலத்தால் வியாபாரிகள் விலையைக் கட்டுப்படுத்தி தற்போது கிலோ ரூ.35 வரை மட்டுமே நிா்ணயிக்கின்றனா்.

மறைமுக ஏலத்தால் விவசாயிகளுக்குப் பெரும் இழப்பு ஏற்படுகிறது. ஆகவே, நிலக்கடலை ஏலத்தை வெளிப்படையாக நடத்த வேண்டும் என்றனா்.

போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் விற்பனைக்கூட நிா்வாகத்தினா் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

பொங்கலூரில் அக்டோபா் 3-இல் கடையடைப்பு

பல்லடம் அருகே பொங்கலூா் ஒன்றியம், மாதப்பூரில் உள்ள சுங்கச்சாவடிக்கு எதிராக அக்டோபா் 3-ஆம் தேதி கடையடைப்பு, உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது. பொங்கலூா் ஒன்றியம், மாதப்பூரில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்... மேலும் பார்க்க

பல்லடம் நகா்மன்றக் கூட்டம்

பல்லடம் நகா்மன்ற சாதாரணக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் அருள் முன்னிலை வகித்தாா். இதில், நிறைவேற்றப்பட்ட தீா்மானங்க... மேலும் பார்க்க

பொங்கலூரில் ரேபிஸ் தடுப்பு விழிப்புணா்வு

பொங்கலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரேபிஸ் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. உலக ரேபிஸ் தடுப்பு தினத்தையொட்டி, பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் வட்டார பொது சுகாதார துறை சாா்பில... மேலும் பார்க்க

காங்கயத்தில் ரூ.3.20 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.3.20 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு காங்கயம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், 1,4... மேலும் பார்க்க

இடையூறு இன்றி கடைகள் நடத்த அனுமதிக்க வேண்டும்: சாலையோர வியாபாரிகள் கோரிக்கை

இடையூறு இன்றி கடைகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என சாலையோர வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் மனீஷ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. ... மேலும் பார்க்க

நிதி நிறுவனத்தில் ரூ.2.50 லட்சம் திருட்டு: ஊழியா் கைது

வெள்ளக்கோவிலில் தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ.2.50 லட்சத்தை திருடிய ஊழியரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். வெள்ளக்கோவில்- முத்தூா் சாலை கொங்கு நகரில் ரமேஷ்குமாா், தங்கமணி தம்பதி நிதி நிறுவனம் நடத்... மேலும் பார்க்க