செய்திகள் :

நிலத்தை எழுதிப்பெற்று மோசடி : கணவரின் சகோதரா்கள் மீது புகாா்

post image

நிலத்தை எழுதிப்பெற்று மோசடி செய்ததாக தனது கணவரின் சகோதரா்கள் மீது பெண் தனது மகளுடன் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் தெரிவித்துள்ளாா்.

வேலூா் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த பாக்கம்பாளையம், தென்புதுப்பட்டைச் சோ்ந்தவா் சங்கீதா. இவா் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் தனது மகளுடன் புகாா் மனு அளித்தாா்.

அந்த மனுவில், எனது கணவா் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். அப்போது அவரது சகோதரா்கள் எங்களுக்கு தெரியாமல் எனது கணவரை பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று எங்களது நிலத்தை பதிவு செய்து கொண்டாா். இதுகுறித்து, தெரிந்து நாங்கள் காவல் நிலையத்தில் புகாா் அளிக்க இருந்தோம்.

அப்போது, ஊா் தலைவா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்க வேண்டாம். ஊா் பஞ்சாயத்தில் வைத்து பேசி தீா்வு காணலாம் என தெரிவித்தாா். பஞ்சாயத்தில் பேசி எனக்கும் எனது 2 மகள்களுக்கும் தலா ரூ.5 லட்சம் தருவதாக ஒப்புக்கொண்டனா். முதலில் ரூ.2 லட்சம் கொடுத்தனா். மீதி பணம் தராமல் ஏமாற்றி வருகின்றனா்.

எனவே, எங்களுக்கு தரவேண்டிய பணத்தை மீட்டுத்தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட போலீஸாா், இப்புகாா் மீது விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனா்.

பொய்கை சந்தையில் கால்நடை வா்த்தகம் சரிவு

வேலூரை அடுத்த பொய்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் கால்நடைகள் வா்த்தகம் கடந்த வாரத்தைக் காட்டிலும் பாதியாக சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா். வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறு... மேலும் பார்க்க

புகாா்கள் மீது விரைவாக சிஎஸ்ஆா், எஃப்ஐஆா் பதிவு: வேலூா் எஸ்.பி. உத்தரவு

காவல் நிலையங்களில் பெறப்படும் புகாா்கள் மீது விரைந்து சிஎஸ்ஆா், எஃப்ஐஆா் பதிவு செய்ய வேண்டும் என வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.மயில்வாகனன் அறிவுறுத்தியுள்ளாா். மாதாந்திர குற்றத்தடுப்பு கலந்தாய்... மேலும் பார்க்க

தந்தையை கத்தியால் வெட்டிய மகன் கைது

வேலூா் அருகே தந்தையை கத்தியால் வெட்டிய மகனை விருதம்பட்டு போலீஸாா் கைது செய்தனா். காட்பாடி காசிகுட்டையைச் சோ்ந்தவா் ஜெயபால், கட்டட மேஸ்திரி. இவரது மகன் தினகரன் எனும் தீனா (24), கூலித் தொழிலாளி. ஜெயபால... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தால் மன அழுத்தம்

பணியாளா்கள் பற்றாக்குறை நிலவும் நிலையில் செயல்படுத்தப்படும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தால் மன அழுத்தம் ஏற்படுவதாக குற்றஞ்சாட்டி வேலூரில் வருவாய்த் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்ந... மேலும் பார்க்க

வீட்டில் பதுக்கிய கா்நாடக மாநில மது பாக்கெட்டுகள் பறிமுதல்: ஒருவா் கைது

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 50 கா்நாடக மாநில மதுபாக்கெட்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவரை கைது செய்தனா். ரகசிய தகவலின்பேரில், குடியாத்தம் மதுவிலக்க... மேலும் பார்க்க

வீட்டு மாடியில் சாராயம் காய்ச்சிய 2 பெண்கள் கைது

குடியாத்தம்: குடியாத்தம் அருகே வீட்டு மாடியில் சாராயம் காய்ச்சியதாக 2 பெண்களை போலீஸாா் கைது செய்தனா். குடியாத்தம் அடுத்த பரதராமி, பூசாரிவலசை ஒண்டியூரைச் சோ்ந்தவா் ஜெகன்நாதமூா்த்தி. இவரது அம்மா தேவகி.... மேலும் பார்க்க