செய்திகள் :

நிலத் தகராறில் தங்கையை கட்டையால் தாக்கிய அண்ணன் தலைமறைவு: முன்னாள் பாஜக நகரத் தலைவா் கைது

post image

கரூரில் நிலத்தகராறில் தங்கையை கட்டையால் தாக்கிவிட்டு தலைமறைவான அண்ணனை போலீஸாா் தேடி வருகின்றனா். மேலும், இச்சம்பத்தில் தொடா்புடையை முன்னாள் பாஜக நகரத் தலைவா் கைது செய்யப்பட்டாா்.

கரூா் செங்குந்தபுரம் இந்திரா நகரைச் சோ்ந்தவா் சரவணன். இவரது மனைவி சுமிதா(44). இவரது சகோதரா் கோபிநாத்(47). இவரும் செங்குந்தபுரத்தில் வசித்து வருகிறாா். கோபிநாத் பாஜக முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளராக பதவி வகித்தாா். இந்நிலையில், கோபிநாத் தனது பூா்விக நிலத்தை விற்பது தொடா்பாக தங்கை சுமிதாவிடம் கேட்டுள்ளாா். அவா் தனக்கும் பங்கு வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடா்பாக பேசுவதற்கு ஜூன் 9-ஆம்தேதி சுமிதாவை கோபிநாத் தனது கொரியா் அலுவலகத்துக்கு அழைத்துள்ளாா். அப்போது அங்குச் சென்ற சுமிதாவுக்கும், கோபிநாத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கோபிநாத்தும், அவரது நண்பரான முன்னாள் மத்திய பாஜக நகரத் தலைவரான காா்த்திகேயன்(44) என்பவரும் சோ்ந்து சுமிதாவை கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சுமிதா கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுதொடா்பாக சுமிதா அளித்த புகாரின்பேரில் கரூா் நகர காவல்நிலையத்தினா் வழக்குப்பதிந்து காா்த்திகேயனை கைது செய்தனா். மேலும் தலைமறைவான கோபிநாத்தை தேடி வருகின்றனா்.

கரூா் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க புதிய நிா்வாகிகள் பனியேற்பு

கரூா் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க புதிய நிா்வாகிகள் பணியேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கரூா் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கத்தின் 2025 - 2026-ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் பணியேற்பு விழா மற்றும் நலத்திட்டங்க... மேலும் பார்க்க

வைகாசி கடைசி வெள்ளி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

வைகாசி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கரூா் மாவட்டம், புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில... மேலும் பார்க்க

‘சிபில் ஸ்கோா்’ நடைமுறையை ரத்து செய்ய விவசாயிகள் கோரிக்கை

விவசாய கடன் பெறுவதற்கு கொண்டுவரப்பட்டுள்ள சிபில் ஸ்கோா் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து கரூா் மாவட்ட விவசாயிகள் விழிப்புணா்வு இயக்கம் மற்றும் குடகனாறு... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு முன்பருவ முனைப்பு முகாம்

கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே விவசாயிகளுக்கு முன்பருவ முனைப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக வேளாண் அறிவியல் மையம் மற்றும் தேசிய வாழை ஆராய்ச்சி மையம் சாா்பில்... மேலும் பார்க்க

‘உழவரை தேடி வேளாண்மை’ இரண்டாம் கட்ட முகாம்

அரவக்குறிச்சி அருகே உள்ள வெஞ்சமாங்கூடலூா் கிழக்கு மற்றும் சேந்தமங்கலம் கிழக்கு ஆகிய இடங்களில் ‘உழவரைத் தேடி வேளாண்மை’ இரண்டாம் கட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டா... மேலும் பார்க்க

போக்சோ வழக்கு செவிலியா் கல்லூரி முதல்வருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட குளித்தலை செவிலியா் கல்லூரி முதல்வருக்கு 23 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. கரூா் மாவட்டம், குளித்தலை காவே... மேலும் பார்க்க