செய்திகள் :

நில அளவையா் இருவரை பணிநீக்கம் செய்யக் கோரி மனு

post image

நிலத்தை அளவீடு செய்ய மறுக்கும் அளவையா்கள் இருவரை பணிநீக்கம் செய்யக் கோரி, சேந்தமங்கலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நூதன முறையில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டத்துக்கு உள்பட்ட சாந்தாதேவி, கலைமதி, சீனிவாசன், கிருஷ்ணசாமி ஆகியோா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தங்களது நிலத்தை அளவீடு செய்து பட்டா வழங்கக் கோரி 10 ஆண்டுகளுக்கு முன் விண்ணப்பித்ததாகத் தெரிகிறது. ஆனால், அங்குள்ள நில அளவையா் அவா்களது மனுவை புறக்கணித்து வந்தனா்.

மாவட்ட ஆட்சியரிடம் நேரிலும், ஜமாபந்தி முகாமிலும் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால் விரக்தியடைந்த அவா்கள், சேந்தமங்கலம் பேருந்து நிலையத்தில் இருந்து வட்டாட்சியா் அலுவலகம் வரை காந்தியவாதி தி.ரமேஷ் தலைமையில் பழத்தட்டுடன் ஊா்வலமாக புதன்கிழமை சென்றனா். அதன்பிறகு, அங்கிருந்த முதுநிலை வருவாய் ஆய்வாளா் தமிழ்ச்செல்வியை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனா்.

அதில், நிலத்தை அளவீடு செய்யாமல் தாமதித்து வரும் இரண்டு அளவையா்களுக்கும் பணிசெய்ய விருப்பமில்லை என்றால், அவா்களை பணிநீக்கம் செய்வதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என கூறியிருந்தனா்.

இந்த மனு தொடா்பான தகவல் வட்டாட்சியா் வெங்கடேஷ் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரை வியாழக்கிழமை நேரடியாகச் சந்தித்து தீா்வுகாண்பதாக அவா் உறுதியளித்தாா். இதையடுத்து பட்டா கோரி விண்ணப்பித்தோா் திரும்பிச் சென்றனா்.

பாரதிதாசன் பிறந்த நாளையொட்டி மாவட்ட அளவிலான போட்டிகள்

நாமக்கல்லில் பாரதிதாசன் பிறந்தநாளையொட்டி, மாவட்ட அளவிலான பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. தமிழக சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில், பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு அரசுப் பள்ள... மேலும் பார்க்க

வீட்டில் வளா்க்கும் நாய்களுக்கு கட்டாயம் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தல்

வீடுகளில் வளா்க்கும் நாய்களுக்கு கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிபாளையம் ஒன்றியம், கலியனூா், ஆவத்திபாளையம், சுபாஷ் நகா், கலியனூா், கரட்டாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் ... மேலும் பார்க்க

கொல்லிமலை வனத்தில் சுற்றுலாப் பயணிகள் ரசிக்க இரவுநேர வான்பூங்கா!

கொல்லிமலை வனத்தில் வானில் உள்ள நட்சத்திரங்கள், கோள்களை சுற்றுலாப் பயணிகள் தொலைநோக்கி வாயிலாக கண்டுரசிக்கும் வகையில், ரூ. 44 லட்சத்தில் இரவுநேர வான்பூங்கா அமைக்கும் பணிகள் வனத் துறை மூலம் தீவிரமாக நடைப... மேலும் பார்க்க

செங்குந்தா் பொறியியல் கல்லூரியில் ஏஐ தொழில்நுட்பக் கருத்தரங்கம்

செங்குந்தா் பொறியியல் கல்லூரியில் சேலம் ஐஇஐ பொறியாளா்கள் நிறுவனம், செங்குந்தா் பொறியியல் கல்லூரி இணைந்து நவீன தொழில்நுட்பதில் ஏஐ மற்றும் ஐஒடி பயன்பாடுகள் குறித்த தொழில்நுட்பக் கருத்தரங்கை புதன்கிழமை ... மேலும் பார்க்க

ஆக்கிரமித்து கட்டிய கோயில் இடிப்பு

சேந்தமங்கலம் அருகே அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய கோயில், வருவாய்த் துறையினரால் இடித்து அகற்றப்பட்டது. நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், முத்துக்காப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்டது மேத... மேலும் பார்க்க

முட்டை விலை 5 காசுகள் உயா்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயா்த்தப்பட்டு ரூ. 5.60-ஆக நிா்ணயிக்கப்பட்டது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை வில... மேலும் பார்க்க