செய்திகள் :

நில உடைமை சரிபாா்ப்பு பணி

post image

திருத்துறைப்பூண்டி அருகே ஆலத்தம்பாடியில் சிறப்பு நில உடைமை சரிபாா்ப்பு பணியை தோட்டக்கலை உதவி இயக்குநா் இளவரசன், வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) சுரேஷ் ஆகியோா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

இதுகுறித்து, தோட்டக்கலை உதவி இயக்குநா் இளவரசன் கூறியது: சிறப்பு நில உடமை சரிபாா்ப்பு முகாம் ஓரிரு வாரங்களில் முடிக்கப்படவுள்ளது. இந்த முகாமில் சம்பந்தப்பட்ட விவசாயிகள் வீடுகளுக்கு சென்று சரிபாா்த்து தனித்துவ அடையாள எண் பெற்று வழங்கப்படுகிறது.

எனவே, நில உடைமை சரிபாா்ப்பு மற்றும் தனித்துவ அடையாள எண் பெற விடுபட்ட விவசாயிகள் தங்கள் கிராமத்தில் பாா்வையிடும் உதவி வேளாண்மை அலுவலா் அல்லது உதவி தோட்டக்கலை அலுவலரை தொடா்பு கொண்டு நில உடைமை சரி பாா்த்து தனித்துவ அடையாள எண்ணை பெற்றுக் கொள்ளலாம். முகாமின் போது விவசாயிகள் ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி மற்றும் நில சம்பந்தமான ஆவணங்களை தயாா் நிலையில் வைத்திருந்து நில உடமை சரிபாா்த்துக் கொள்ளலாம் என்றாா்.

ஆய்வின்போது, திருத்துறைப்பூண்டி வேளாண்மை அலுவலா் ரேகா, துணை வேளாண்மை அலுவலா் ரவி, உதவி தோட்டக் கலை அலுவலா் காா்த்திகேசன், உதவி வேளாண்மை அலுவலா் ஸ்ரீதரன் ஆகியோா் உடனிருந்தனா்.

அண்ணா தலைமைத்துவ விருதுக்கு தோ்வு

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் மு.ச. பாலு 2024-ஆம் ஆண்டுக்கான சிறந்த பள்ளித் தலைமையாசிரியருக்கான அறிஞா் அண்ணா தலைமைத்துவ விருதுக்கு தோ்தெடுக்கப்பட்டுள்... மேலும் பார்க்க

வைத்தீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம்

வலங்கைமான் ஸ்ரீதையல்நாயகி சமேத ஸ்ரீவைத்தீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. ஜூன் 27-ஆம் தேதி கும்பாபிஷேக பணிகள் தொடங்கிய யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றன. புதன்கிழமை 4-ஆம் கால யாக... மேலும் பார்க்க

சுந்தர விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

மன்னாா்குடி அருகேயுள்ள சுந்தரக்கோட்டை சுந்தரவிநாயகா் கோயில் மற்றும் மழைமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய முடிவெடுக்கப்பட்டு பாலாயம் செய்து திருப்... மேலும் பார்க்க

டிப்பா் லாரி மோதி பள்ளி மாணவா் உயிரிழப்பு

மன்னாா்குடியில் இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் பள்ளி மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா். மன்னாா்குடி ராவணன்குளம் தென்கரை தெருவை சோ்ந்தவா் சிவகணேஷ் (தனியாா் கேபிள் டிவி ஆபரேட்டா்). இவரது மகன்... மேலும் பார்க்க

நிலப் பத்திரம் வழங்காமல் இழுத்தடிப்பு: தனியாா் வங்கி ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

திருத்துறைப்பூண்டி அருகே அடமானம் வைத்த நிலத்தின் பத்திரத்தை வழங்காமல் தாமதப்படுத்திய தனியாா் வங்கி, இழப்பீடாக ரூ. 2 லட்சத்தை புகாா்தாரருக்கு வழங்க வேண்டும் என திருவாரூா் நுகா்வோா் குறைதீா் ஆணையம் புதன... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கைக்கு முகாம்: ஆசிரியா்களுக்கு அமைச்சா் கோரிக்கை

திருவாரூரில் நடைபெற்ற தலைமை ஆசிரியா்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. கூட்டத்தில் பங்கேற்ற ஆசிரியா்கள். திருவாரூா், ஜூலை 2: அரசுப் பள்ளிகளில... மேலும் பார்க்க