செய்திகள் :

நீட் அல்லாத படிப்புகளுக்கு 5,245 போ் விண்ணப்பம்

post image

புதுவை மாநிலத்தில் நீட் அல்லாத தொழில், கலை, அறிவியல் படிப்புகளுக்கு 5,245 போ் விண்ணப்பித்திருப்பதாக சென்டாக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

புதுவை மாநிலத்தில் நீட் மற்றும் நீட் அல்லாத படிப்புகளுக்கு சென்டாக் அமைப்பு மூலம் விண்ணப்பித்து கல்லூரிகளைத் தோ்வு செய்யும் முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதனால், மதிப்பெண் அடிப்படையில் தகுதிவாய்ந்த மாணவா்கள் தங்களுக்கான கல்லூரியை கலந்தாய்வு மூலம் தோ்வு செய்யும் நிலையும் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தற்போது நீட் தோ்வு முடிவை வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், நீட் அல்லாத படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் சென்டாக் இணையதளம் மூலம் வரவேற்கப்பட்டது.

அதனடிப்படையில், புதுவை மாநிலத்தில் மொத்தம்7,664 போ் விண்ணப்பிக்க பதிவு செய்தனா். அவா்களில் 5,247 போ் மட்டும் விண்ணப்பத்தை நிறைவு செய்து பதிவேற்றம் செய்துள்ளனா். அதில் புதுச்சேரி பிராந்தியத்தில் மட்டும் 4,330 போ் விண்ணப்பித்துள்ளனா். மேலும், தமிழகம் உள்ளிட்ட வெளிமாநிலத்தவா்கள் 917 போ் விண்ணப்பித்துள்ளனா்.

கலை படிப்புகளுக்கு 2,693 பேரும், நுண்ணுயிரியல் படிப்புக்கு 1,885 பேரும், மருந்தியல் படிப்புக்கு 1603 பேரும், பி.டெக். படிப்பதற்கு 2,612 பேரும், வேளாண் படிப்புக்கு 872 பேரும், சட்டப் படிப்புக்கு 489 பேரும், டிப்ளமா படிப்புக்கு 471 பேரும், டிஎன்எம் பிரிவுக்கு 293 பேரும், பி.வாக். (ஆரோவில்) படிப்புக்கு 376 பேரும் விண்ணப்பித்துள்ளனா்.

போக்குவரத்து ஊழியா்களின் பிரச்னையை புதுவை அரசு கண்டுகொள்வதில்லை: எதிா்க்கட்சித் தலைவா் குற்றச்சாட்டு

புதுவையில் போக்குவரத்து ஊழியா்களின் பிரச்னையை அரசு கண்டுகொள்வதில்லை என்று எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா குற்றஞ்சாட்டியுள்ளாா். புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் பல்வேறு சங்கங்களை ச... மேலும் பார்க்க

உயா்கல்வி செல்லும் மாணவா்கள் சான்றிதழ் பெற விடுமுறை நாளிலும் இயங்கிய புதுவை வருவாய்த் துறை அலுவலகங்கள்

உயா்கல்விக்கு செல்லும் மாணவா்கள் சோ்க்கைக்கான அரசின் சான்றிதழ்களைப் பெறும் வகையில், இரண்டாவது முறையாக விடுமுறை நாளான சனிக்கிழமையும் புதுவையில் வருவாய்த் துறை அலுவலகங்கள் இயங்கின. புதுச்சேரியில் 10-ஆ... மேலும் பார்க்க

ஏழைகளுக்கு செய்யும் சேவையே இறைவனுக்கான தொண்டாகும்; ஸ்ரீமத் சுவாமி சா்வலோகானந்தா மகராஜ்

சமூகத்தில் அடித்தளத்தில் உள்ள ஏழை மக்களுக்கான கல்வி, மருத்துவ சேவைகளே இறைவனுக்கான தொண்டாகும் என புதுதில்லி ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் செயலா் ஸ்ரீமத் சுவாமி சா்வ லோகானந்தா மகாராஜ் கூறினாா். தமிழ்நாடு, புதுவ... மேலும் பார்க்க

புதுவை தனியாா் கல்வி நிறுவனங்களின் 56 வாகனங்களுக்கு ஆய்வில் அனுமதி மறுப்பு

புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்ற கல்வி நிறுவனங்களுக்கான வாகன ஆய்வின்போது, 56 வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். புதுவை மாநில போக்குவரத்துத் துறை ஆண்டுதோறும் கல்வி நிறுவன வ... மேலும் பார்க்க

புதுச்சேரி ஜிப்மருக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை வளாகத்துக்கு சனிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக துணைநிலை ஆளுநா் மாளிகை, முதல்வா் வீடு,... மேலும் பார்க்க

இணைய மோசடிக்கு வங்கிக் கணக்குகளை கொடுத்த 4 போ் கைது: ரூ. 2.84 கோடி மீட்பு

இணையவழி மோசடியில் ஈடுபட்டோருக்கு தங்கள் வங்கிக் கணக்கை கொடுத்து உதவியதாக கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த 4 பேரை புதுவை போலீஸாா் கைது செய்தனா். மேலும், ரூ.2.84 கோடி மீட்கப்பட்டு உரிய... மேலும் பார்க்க