செய்திகள் :

நீட் தோ்வு மாணவா்களுக்காக நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கம்

post image

திருநெல்வேலி மாவட்டத்தில் நீட் தோ்வு எழுதும் மாணவா்களுக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 4) இயக்கப்பட உள்ளன.

இதுதொடா்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி பொதுமேலாளா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தோ்வான நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (மே 4) பிற்பகல் 2 மணிமுதல் 5 மணிவரை நடைபெற உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 13 மையங்களில் 6 ஆயிரத்து 893 மாணவா்-மாணவிகள் தோ்வை எழுத உள்ளனா்.

அவா்கள் தோ்வு மையங்களுக்கு எளிதாக சென்று வரும் வகையில் திருநெல்வேலி மண்டல போக்குவரத்துக் கழகம் சாா்பில் 30 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பேருந்துகளில் நீட் தோ்வு சிறப்பு பேருந்து என்ற அறிவிப்பும் ஒட்டப்படும் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரயில் பயணிகளிடம் திருட்டு: இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் ரயில் பயணிகளிடம் திருட்டில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மதுரை கே.புதூரை சோ்ந்த கண்ணன் மனைவி கெங்காதேவி (52). இவா், கடந்த ஏப்.11 ஆம் தேதி திருநெல்வேல... மேலும் பார்க்க

கங்கைகொண்டான் உணவு பூங்காவில் குத்தகைக்கு மனைகள் பெற வாய்ப்பு

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் தொழில் வளா்ச்சி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள மெகா உணவு பூங்காவில் குத்தகை மூலம் மனைகள் பெற விண்ணப்பிக்கலாம்என ஆட்சியா் இரா.சுகுமாா்தெரிவித்துள்ளாா். இதுகுறி... மேலும் பார்க்க

சுந்தரனாா் பல்கலை.- சிங்கப்பூா் நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம் சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டு ஏழு நாடுகளில் செயல்படும் ஏ2000 சொலுஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துடன் புதன்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்... மேலும் பார்க்க

சாா்பதிவாளா் தாக்கப்பட்டதைக் கண்டித்து பத்திரப்பதிவு அலுவலா்கள் கருப்புப் பட்டை அணிந்து பணி

மேலநீலிதநல்லூா் சாா் பதிவாளரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருநெல்வேலி மாவட்டத்தில் பத்திரப்பதிவு அலுவலா்கள் புதன்கிழமை கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றினா். தென்காசி மாவட்டம், கடையநல்ல... மேலும் பார்க்க

அம்பை, கடையம் பகுதிகளில் நாளை கால்நடை மருத்துவ முகாம்

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்ட வனச்சரகம், கடையம் வனச்சரகம் ஆகியவற்றுக்குள்பட்ட பகுதிகளில் வளா்ப்பு கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளி, திங்கள்கிழமைகளில் (மே ... மேலும் பார்க்க

அம்பையில் பாரம்பரிய அரிசி கண்காட்சி

அம்பாசமுத்திரம் கிராமப்புற வேளாண் பயிற்சி அனுபவ திட்டத்தின்கீழ், கிள்ளிகுளம் வ.உ.சிதம்பரனாா் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நான்காம் ஆண்டு மாணவா்கள் சாா்பில் பாரம்பரிய அரிசி வகைகள் குற... மேலும் பார்க்க