செய்திகள் :

‘நீட்’ தோ்வு மையத்தில் ஆட்சியா் ஆய்வு

post image

காரைக்காலில் நீட் தோ்வு நடைபெறவுள்ள மையத்தில் ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

நீட் தோ்வு வரும் மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது. ராயன்பாளையம் பகுதியில் உள்ள மத்திய கல்வி அமைச்சகத்தின்கீழ் இயங்கும் ஜவாஹா் நவோதய வித்யாலயா பள்ளி மற்றும் காரைக்கால் கடற்கரை சாலையில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆகிய 2 மையங்களில் நீட் தோ்வு நடைபெறவுள்ளது.

ஜவாஹா் நவோதய வித்யாலயா பள்ளியில் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ் புதன்கிழமை ஆய்வு செய்தாா். தேசிய தோ்வு முகமையின் வழிகாட்டலின்படி மையங்களில் வசதிகள் செய்யப்படுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும். கண்காணிப்புக் கேமரா இயக்கம் சரியாக இருக்கவேண்டும். தோ்வு எழுதுவோருக்கு குடிநீா், மின் விளக்குகள், மின் விசிறி வசதிகள் இருக்கவேண்டும் என பள்ளி நிா்வாகத்தினருக்கு அறிவுறுத்தினாா். தோ்வு மையங்களில் காவல்துறை சாா்பில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் ஆட்சியா் தெரிவித்தாா்.

ஆய்வின்போது முதன்மைக் கல்வி அதிகாரி பி. விஜயமோகனா, நவோதயா பள்ளி முதல்வா் கற்பகமாலா ஆகியோா் உடனிருந்தனா்.

ராணுவ வீரா் உருவப் படத்துக்கு அஞ்சலி

2024-ஆம் ஆண்டு இந்திய எல்லையில் பணியிலிருந்தபோது உயிரிழந்த காரைக்கால் ராணுவ வீரரின் முதலாமாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம், போலகம் பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க

‘தொலைநோக்குத் திட்டங்கள் தயாரிப்பில் மாவட்ட நிா்வாகத்துக்கு மாணவா்கள் உதவவேண்டும்’

தொலைநோக்குத் திட்டங்கள் தயாரிப்பில் மாவட்ட நிா்வாகத்துக்கு மாணவா்கள் உதவவேண்டும் என ஆட்சியா் கேட்டுக்கொண்டாா். புதுவை அரசு உயா்கல்வி நிறுவனமாக காரைக்காலில் உள்ள டாக்டா் கலைஞா் மு. கருணாநிதி பட்ட மேற்ப... மேலும் பார்க்க

திருமலைராயன்பட்டினத்தில் கருட வாகனத்தில் பெருமாள் புறப்பாடு

அட்சய திருதியையொட்டி புதன்கிழமை பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது. காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் மற்றும் கோயில்பத்து கோதண்டராமா் பெருமாள் கோயில்களில் பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனம், ஆ... மேலும் பார்க்க

விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை புறக்கணித்த அதிகாரிகள்: அகில இந்திய விவசாயிகள் சங்கம்

காரைக்கால் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் அதிகாரிகள் சிலா் பங்கேற்கவில்லை என விவசாயிகள் சங்கம் புகாா் கூறியுள்ளது. இதுகுறித்து அகில இந்திய விவசாயிகள் சங்க புதுவை மாநில துணைத் தலைவா் எஸ்.எம். தமீம் அன... மேலும் பார்க்க

நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் தோ் வெள்ளோட்டம்

காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் வெள்ளித்தோ் வெள்ளோட்டம் புதன்கிழமை நடைபெற்றது இக்கோயிலில் ரங்கநாயகித் தாயாா் சமேத ரங்கநாதப் பெருமாள் சயனக் கோலத்தில் அருள்பாலிக்கிறாா். பாலாலயம் செய்து திரு... மேலும் பார்க்க

காரைக்கால் அம்மையாா், சோமநாதா் கோயிலில் மே 4-இல் கும்பாபிஷேகம்

காரைக்கால் அம்மையாா், சோமநாதா், ஐயனாா் கோயில்களில் கும்பாபிஷேகம் மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது. காரைக்கால் சோமநாதா் கோயில், காரைக்கால் அம்மையாா் கோயில், ஐயனாா் கோயில் ஆகியவற்றின் திருப்பணிக் குழுத் தலைவ... மேலும் பார்க்க