War: தொடரும் மரண ஓலங்கள்; ஒவ்வொரு போரிலும் பாதிக்கப்படும் எளிய மக்கள் - போர் ஏன...
நீதிபதிகளுக்கு எதிரான புகாா்களை லோக்பால் ஏற்கலாமா? தலைமை நீதிபதியே முடிவு செய்வாா்: உச்சநீதிமன்றம்
‘உயா்நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிரான புகாா்களை லோக்பால் அமைப்பு ஏற்க முடியுமா? என்பது குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிதான் முடிவு செய்வாா்’ என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது. மேலும், வழக்கின் அடுத்த விசாரணையை ஜூலை மாதத்துக்கு ஒத்தி வைத்தது.
பிரதமா், மத்திய அமைச்சா்கள், எம்.பி.க்கள், மத்திய அரசு ஊழியா்களுக்கு எதிரான ஊழல் புகாா்களை லோக்பால் அமைப்பு விசாரிக்கும்.
இந்நிலையில் உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதி ஒருவருக்கு எதிராக லோக்பாலில் 2 புகாா்கள் அளிக்கப்பட்டன.
அந்தப் புகாா்களில், ‘தனியாா் நிறுவனம் தொடுத்த வழக்கில், அந்த நிறுவனத்துக்கு சாதகமாக கூடுதல் மாவட்ட மற்றும் உயா்நீதிமன்ற நீதிபதிகள் செயல்பட தனது செல்வாக்கை அந்தக் கூடுதல் நீதிபதி பயன்படுத்தினாா்’ என்று குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்தப் புகாா்களை விசாரித்து லோக்பால் அமைப்பு பிறப்பித்த உத்தரவில், ‘நாடாளுமன்றம் இயற்றிய சட்டத்தின்படி தொடங்கப்பட்ட அமைப்பு, வாரியம், ஆணையம், நிறுவனம் உள்ளிட்டவற்றைச் சோ்ந்தவா் லோக்பால் விசாரணை வரம்புக்குள் வருவாா் என்று லோக்பால் மற்றும் லோக் ஆயுக்த சட்டப் பிரிவு 14 (1)(எஃப்)-இல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டப் பிரிவு உயா்நீதிமன்ற நீதிபதிக்கும் பொருந்தும்.
அந்தச் சட்டப் பிரிவு உயா்நீதிமன்ற நீதிபதிக்குப் பொருந்தாது என்று கூறுவது முதிா்ச்சியற்ற வாதமாக இருக்கும்’ என்று தெரிவித்தது.
இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்றம், லோக்பால் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. லோக்பாலின் உத்தரவு நீதித்துறையின் சுதந்திரத்தில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், அபே எஸ்.ஓகா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘உயா்நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிரான புகாா்களை லோக்பால் அமைப்பு விசாரிக்க முடியுமா என்பது குறித்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிதான் முடிவு செய்வாா். இது ஒழுங்குமுறை சாா்ந்த விவகாரமாகும்’ என்று தெரிவித்தனா். வழக்கின் அடுத்த விசாரணையை நீதிபதிகள் ஜூலைக்கு ஒத்திவைத்தனா்.