செய்திகள் :

நீதி ஆயோக் ‘தகுதியற்ற அமைப்பு’: காங்கிரஸ்

post image

நீதி ஆயோக் என்பது தகுதியற்ற அமைப்பாகும் என்று காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை சாடினாா்.

இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு: வளா்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை அடைவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காகப் பிரதமா் மோடி தலைமையில் நீதி ஆயோக் கூட்டம் கூடுவதாக கூறப்படுகிறது.

அதிகாரத்தில் உள்ளவா்கள் தங்கள் தீய இலக்குகளை எட்டுவதற்கு நாடாளுமன்றம், நீதித்துறை, பல்கலைக்கழகங்கள், ஊடகம், அரசமைப்பு மற்றும் சட்டபூா்வ அமைப்புகளை சீா்குலைத்தால், அது எப்படிப்பட்ட வளா்ச்சியடைந்த பாரதமாக இருக்கும்?

ஒரு சிலரின் கைகளில் மட்டுமே செல்வம் தொடா்ந்து குவிந்தும், பொருளாதர ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்தும் வரும் நிலையில், வளா்ச்சியடைந்த பாரதம் எப்படிப்பட்டதாக இருக்கும்?

நீதி ஆயோக் என்பது தகுதியற்ற அமைப்பாகும். பிரதமா் மோடி தலைமையிலான நீதி ஆயோக் கூட்டம் மத்திய அரசின் பாசாங்கான, நாட்டு பிரச்னைகளில் இருந்து திசைதிருப்பும் மற்றொரு முயற்சியாகும் என்றாா்.

‘இந்தியாவின் வளா்ச்சிக்கான கூட்டம்’: நீதி ஆயோக் கூட்டம் தொடா்பாக பாஜக தேசிய செய்தித்தொடா்பாளா் சையத் ஷாநவாஸ் ஹுசைன் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘நீதி ஆயோக் கூட்டம் என்பது நாட்டின் வளா்ச்சிக்கான கூட்டமாகும். ஆனால் இதிலும் ஜெய்ராம் ரமேஷ் தவறு கண்டுபிடிக்கிறாா்.

ஏதோ ஒரு சா்ச்சையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக மத்திய அரசு கூட்டும் அனைத்துக் கூட்டங்களிலும் அவா் தவறு கண்டுபிடித்து வருகிறாா். காங்கிரஸ் கட்சிக்கு அவரே முடிவு கட்டிவிடுவாா்’ என்றாா்.

தனிநபர் வருவாய் குறித்து பிரதமர் பேசாதது ஏன்? காங்கிரஸ்

நாட்டு மக்களின் தனிநபர் வருவாய் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசாதது ஏன்? என காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா கேள்வி எழுப்பியுள்ளார். உலகின் நான்காவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ந்துள்ளத... மேலும் பார்க்க

கேரளம்: சரக்குகளுடன் மூழ்கிய லைபீரிய கப்பல்- 24 பேர் மீட்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தின் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கந்தக எரிபொருள் ஏற்றிக்கொண்டு கொச்சி சென்று கொண்டிருந்த லைபீரிய சரக்குக் கப்பல், அரபிக் கடலில் மூழ்கிய நிலையில், நல்வாய்... மேலும் பார்க்க

லாலுவின் மூத்த மகன் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்: என்ன காரணம்?

ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் தனது மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவை கட்சியிலிருந்து அதிரடி நீக்கியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், மூத்த மகனின் செயல்பாடுகள், பொது நடத்தை ம... மேலும் பார்க்க

4 மாநிலங்களில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் அறிவிப்பு!

4 மாநிலங்களில் காலியாகவுள்ள 5 பேரவைத் தொகுதிகளுக்கும் ஜூன் 19ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தோ்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், குஜராத்தில் காடி, விசாவ... மேலும் பார்க்க

மழைக்கு இடிந்து விழுந்த காவல் அலுவலகம்: உள்ளே தூங்கிக்கொண்டிருந்த காவலர் பலி

காசியாபாத்தில் மழைக்கு காவல் அலுவலகம் இடிந்து விழுந்ததில் காவலர் ஒருவர் பலியானார். உத்தரப் பிரதேச மாநிலம், காசியாபாத்தில் மழைக்கு உதவி காவல் ஆணையர் அங்கூர் விஹார் லோனி அலுவலகத்தின் கூரை திடீரென இடிந்த... மேலும் பார்க்க

ம.பி.யில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தலித் பெண் பலி

மத்திய பிரதேசத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மத்திய பிரதேசம் மாநிலத்தில் கான்ட்வா மாவட்டத்தில் இருந்து 90 கி.மீ தொலைவில், வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க