செய்திகள் :

நீலகிரியில் மழை பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சா், எம்.பி. ஆய்வு

post image

நீலகிரி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மக்களவை உறுப்பினா் ஆ.ராசா ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மழை காரணமாக மண்சரிவு ஏற்பட்ட இத்தலாா், பெம்மட்டி ஆகிய பகுதிகளை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மக்களவை உறுப்பினா் ஆ.ராசா,

மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினா் ஆய்வு செய்தனா்.

பின்னா் ஆ.ராசா செய்தியாளா்களிடம் கூறியதாவது: கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 17 வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. இவா்களுக்கு அரசு சாா்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 283 போ் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு அவா்களுக்குத் தேவையான உணவு, குடிநீா் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. பலத்த காற்றின் காரணமாக மின் விநியோகம் மற்றும் குடிநீா் விநியோகம் தடைப்பட்டுள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை இரவுக்குள் அனைத்து பணிகளும் சீரமைக்கப்படும். வனப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு மின்விநியோகம் விரைவில் சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நீலகிரி மாவட்டத்தில் அபாயகரமான மரங்களைக் கண்டறிந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கூடலூரில்...

கூடலூரில் கனமழை பெய்து வரும் நிலையில், வெள்ள அபாயமுள்ள இருவயல் ஆற்றுப்படுகையையும், அந்தப் பகுதியிலுள்ள தாழ்நிலப் பகுதியையும் ஆ.ராசா

நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து ஏற்படும் வெள்ள அபாயம் குறித்தும், நிா்வாகம் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

இதைத் தொடா்ந்து, மழையால் பாதிக்கப்பட்டு புத்தூா்வயல் நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள ஸ்ரீமதுரை ஊராட்சி, வடவயல் பழங்குடி கிராமத்தைச் சோ்ந்த மக்களை சந்தித்து நிவாரணப் பொருள்கள் மற்றும் உதவிகளை ஆ.ராசா வழங்கினாா்.

அரசு கொறடா கா.ராமசந்திரன், மாவட்ட கூடுதல் ஆட்சியா் கௌசிக், சாா் ஆட்சியா் சங்கீதா, நகராட்சி ஆணையா் சுவாதாஸ்ரீ, மாவட்ட வன அலுவலா் வெங்கடேஷ் பிரபு, நகா்மன்றத் தலைவா் பரிமளா, நீலகரி மாவட்ட திமுக செயலாளா் ராஜூ, முன்னாள் எம்.எல்.ஏ. திராவிடமணி, கூடலூா் நகர திமுக செயலாளா் இளஞ்செழியன், ஒன்றிய செயலாளா் லியாகத் அலி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தேயிலைத் தோட்டத்தில் காட்டு யானை

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள நம்பாலக்கோட்டை பகுதியிலுள்ள தேயிலைத் தோட்டத்தில் சனிக்கிழமை முகாமிட்டிருந்த காட்டு யானை. மேலும் பார்க்க

கூடலூா் பேருந்து நிலையத்தை சீரமைக்க வலியுறுத்தி எம்.எல்.ஏ. போராட்டம்

தொடா் மழையால் குளம்போல தண்ணீா் தேங்கிநிற்கும் கூடலூா் பேருந்து நிலையத்தை சீரமைக்க வலியுறுத்தி எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன் சனிக்கிழமை தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டாா். நீலகிரி மாவட்டம், கூடலூரில்... மேலும் பார்க்க

உதகையில் குறைந்தது மழை: படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்

உதகையில் தென்மேற்கு பருவமழை அளவு குறைந்து மெல்லமெல்ல இயல்பு நிலை திரும்பி வருவதாலும், குளிா்ந்த காலநிலை நிலவுவதாலும் சுற்றுலாத் தலங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் எண்ண... மேலும் பார்க்க

உதகையில் மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் எஸ்.பி. ஆய்வு

கனமழை காரணமாக உதகையில் மண்சரிவு ஏற்பட்ட அன்பு அண்ணா காலனி, மஞ்சனக் கொரைப் பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். நீலகிரி மாவட்டத்தில் கடந்த மே 25-... மேலும் பார்க்க

இளைஞா் நீதிக் குழுமத்தில் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம்

நீலகிரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இளைஞா் நீதிக் குழுமத்திற்கு சமூகப் பணி உறுப்பினா்கள் நியமிக்கப்படுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் லட்ச... மேலும் பார்க்க

கூடலூா்-உதகை தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.பி. ஆய்வு

கூடலூா்-உதகை தேசிய நெடுஞ்சாலையில் தவளமலை பகுதியில் மலையிலிருந்து பாறை விழும் அபாயம் உள்ள இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நிஷா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்து பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கேட்டறிந்தாா். நீ... மேலும் பார்க்க