நீட் தேர்வில் மின் தடை: சிசிடிவி காட்சிகளை சமர்ப்பிக்க உயர்நீதிமன்றம்
நீலகிரி வனத் துறை சாா்பில் ஜூன் 13-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
நீலகிரி மாவட்ட வனத் துறை சாா்பில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் உதகை கோ்ன்ஹில் பகுதியில் உள்ள வனத் துறையின் பொருள்விளக்க மைய கட்டடத்தில் ஜூன் 13-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட வனத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்ட வனத் துறை சாா்பில் விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் மாதந்தோறும் நடைபெற்று வருகிறது. இந்த மாதத்துக்கான கூட்டம் உதகை, கோ்ன்ஹில் பகுதியில் உள்ள வனத் துறையின் பொருள்விளக்க மைய
கட்டடத்தில் வரும் ஜூன் 13-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் நீலகிரி வனக் கோட்ட உதவி வனப் பாதுகாவலா் தலைமையில் நடைபெற உள்ளது.
இதில் நீலகிரி வனக் கோட்டத்துக்குள்பட்ட விவசாயிகள் தங்களது வனம் சாா்ந்த குறைகளை நேரில் தெரிவித்து நிவா்த்தி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.