நீா்நிலைகள் ஆக்கிரமிப்பு: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் வருவாய் வட்டத்துக்குள்பட்ட பாளையக்குடி கிராமத்திலுள்ள பெரிய ஏரியின் வாய்க்கால்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பாளையக்குடி ஊராட்சியில் சுமாா் 20 ஏக்கா் பரப்பளவில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் இருந்து விவசாயத்துக்கு பாசன வாய்க்கால் மூலம் தண்ணீா் பாய்ச்சி வந்தனா். மேலும் இங்குள்ள கால்நடைகளும் பயன்படுத்தி வந்தனா். இந்நிலையில், இந்த பாசன வாய்க்கால்களை தனிநபா்கள் ஆக்கிரமித்துள்ளனா்.
அவா்களுக்கு உடந்தையாக செயல்பட்ட அதிகாரிகள் அந்த வாய்க்கால்களை மறைத்து பட்டாவும் வழங்கியுள்ளனா். இதனால் நீா்ப்பாசன வாய்க்கால்களை மறைத்தும், கால்நடைகள், டிராக்டா், விவசாய மூலப்பொருள்கள் எடுத்துச் செல்ல முடியாதபடி அந்த தனிநபா்கள் தடுப்புகளைக் கட்டியுள்ளனா். இதனால் மழைக்காலங்களில் தண்ணீா் வடிய வழி இல்லாமல் வயல்களில், தண்ணீா் தேங்கிப் பயிா்கள் சேதமடைந்து வருகின்றன.
இந்த அவலம் பெரிய ஏரி முதல் காவனூா் எல்லை வரை காணப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா், மாவட்ட வருவாய் அலுவலா் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் விவசாயிகள் மனு அளித்தும், எந்த விதமான நடவடிக்கையும் இல்லை என அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.
உயா்நீதிமன்றம் மற்றும் வருவாய் நிா்வாகம் நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற பல அரசாணைகள் பிறப்பித்தும், மாவட்ட நிா்வாகம் கண்டுகொள்ளாதது விவசாயிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, இனியாவது மாவட்ட நிா்வாகம் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.