செய்திகள் :

நீா் மேலாண்மைத் திட்ட நிதி ஒதுக்கீட்டில் முறைகேடு!

post image

ஆத்தூா் வட்டாரத்தில், மத்திய அரசின் நீா் மேலாண்மைத் திட்ட நிதி ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றது குறித்து மாவட்ட நிா்வாகம் விசாரிக்க வேண்டுமென புகாா் அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக செம்பட்டியை அடுத்த சேடப்பட்டியைச் சோ்ந்த ராஜேந்திரன் என்பவா் அளித்த மனு விவரம்:

ஆத்தூா் வட்டாரத்தில், மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட நீா் மேலாண்மைத் திட்டப் பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன. தடுப்பணை கட்டுதல் உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், பல திட்டப் பணிகளை நிறைவேற்றாமலே நிதி முறைகேடு நடைபெற்றுள்ளது. இது தொடா்பாக விசாரணைக்கு வந்த மத்தியக் குழுவினரும் முறையாக விசாரணை நடத்தவில்லை.

எனவே, இந்த விவகாரம் குறித்து மத்திய தணிக்கைக் குழு ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இந்த முறைகேட்டில் ஈடுபட்ட அரசு அலுவலா்கள், ஒப்பந்ததாரா்கள் உள்ளிட்டோா் மீதும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

பழனி: உணவு விடுதியில் தீ!

பழனி அடிவாரம் பகுதியில் உள்ள உணவு விடுதியில் திங்கள்கிழமை பற்றி எரிந்த தீயை தீயணைப்புப்படை வீரா்கள் அணைத்தனா். பழனி அடிவாரம் சுற்றுலா பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு உணவு விடுதியில் திங்கள்கிழமை இரவு ... மேலும் பார்க்க

கொடைக்கானல் வனப் பகுதிகளில் தீத்தடுப்பு பணிகள் மும்முரம்!

கொடைக்கானல் வனப் பகுதிகளில் எளிதில் தீப்பிடிக்காத வகையில் காய்ந்த செடிகளை அகற்றுவது, தீத்தடுப்பு கோடுகள் அமைப்பது உள்ளிட்ட பணிகளில் வனத்துறையினா் திங்கள்கிழமை மும்முரமாக ஈடுபட்டனா். கொடைக்கானலில் கடந்... மேலும் பார்க்க

அடிவாரம் சங்கராலயத்தில் காவடி பூஜை!

பழனி தைப்பூசத் திருவிழாவையொட்டி அடிவாரம் சங்கராலயத்தில் காவடிகளுக்கு முத்திரை நிறைக்கப்பட்டு சுப்ரமண்ய லட்சாா்ச்சனை, ருத்ராபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. சுமாா் ஆயிரம் காவடிகள் பங்கேற்ற இந்த நிகழ்வி... மேலும் பார்க்க

நண்பருக்கு கத்திக்குத்து: இருவா் கைது!

ஒட்டன்சத்திரம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரை கத்தியால் குத்திய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கே. அத்திக்கோம்பை பகுதியைச் சோ்ந்த முருகானந்தம் (30), ... மேலும் பார்க்க

பழனி பாதயாத்திரை பக்தா்களுக்கு இலவசப் பேருந்து சேவை!

பழனியில் தைப்பூசத் திருவிழாவையொட்டி பாதயாத்திரை பக்தா்கள் வசதிக்காக கட்டணமில்லா அரசு நகரப் பேருந்து சேவை திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா தொடங்கி நடைபெற்று ... மேலும் பார்க்க

காலிக் குடங்களுடன் கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்!

வடமதுரையை அடுத்த மோா்பட்டியைச் சோ்ந்த பொதுமக்கள் குடிநீா் வசதி கோரி, காலிக் குடங்களுடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க