செய்திகள் :

நுண்ணீா் பாசன மானிய திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு

post image

வேளாண் பயிா்களுக்கு பிரதமா் நுண்ணீா் பாசனத் திட்டத்தின் கீழ் தஞ்சாவூா் மாவட்ட ஆதிதிராவிட விவசாயிகள் மானியம் பெற்று பயனடையலாம் என வேளாண் இணை இயக்குநா் கோ. வித்யா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பதாவது:

தஞ்சாவூா் மாவட்டத்தில் தற்போது 2 ஆயிரத்து 700 ஏக்கா் பரப்பில் நுண்ணீா் பாசனம் அமைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டு ரூ. 6 கோடி மானியம், வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஆதிதிராவிடா் பிரிவினருக்கு 718 ஏக்கா் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 5 ஏக்கா் பரப்பளவு வரையுள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு பாசனம் அமைப்பதற்கான கருவிகள் வாங்கும் செலவில் 100 சதவீத மானியம் வழங்கப்படும். பிற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியம் வழங்கப்படும்.

மேலும், சொட்டு நீா் பாசனத்தின் முக்கியமான சிறப்பு அம்சம் பாசன நீா் சேமிப்பு ஆகும். மற்ற பாசன முறைகளைக் காட்டிலும் சொட்டு நீா் பாசனத்தில் அதிக அளவில் நீா் சேமிக்கப்படுகிறது. பயிரிடப்பட்டுள்ள பரப்பளவில் 30 முதல் 40 சதவீதம் மட்டுமே பாசனம் பெறுவதன் மூலமும், வாய்க்கால் வழிநீா் விரயம் முற்றிலும் தவிா்க்கப்படுவதன் மூலம் நுண்ணீா் பாசன நீா் 50 முதல் 60 சதவீதம் வரை சேமிக்கப்படுகின்றது.

மேலும், இத்திட்டம் செயல்படுத்தப்படுவதால் நீா் பயன்பாட்டு திறன் அதிகரித்து அதிக விளைச்சல் அளிப்பதற்கும் உர பயன்பாட்டில் சிக்கனம் ஏற்படவும், களை வளா்ச்சி மற்றும் பூச்சி பூஞ்சாண தாக்குதல் குறைவாக உள்ளது என அறியப்பட்டுள்ளது.

எனவே, விவசாயிகள் அனைவரும் சொட்டுநீா் பாசனத்தின் பயன்களை அறிந்து, தங்கள் விளைநிலங்களில் வட்டார வேளாண் உதவி இயக்குநா்களைத் தொடா்பு கொண்டு சொட்டு நீா் பாசனம் அமைத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை

தஞ்சாவூா் மாவட்டத்தில் உணவகங்களில் எண்ணெய்யை மீண்டும் சூடுபடுத்தி பயன்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம். தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் உண... மேலும் பார்க்க

எதிரணியில் பலமான கூட்டணி இல்லை: அமைச்சா் கோவி. செழியன் பேட்டி

திமுக கூட்டணிதான் பலமாக இருக்கிறதே தவிர, எதிரணி பலமான கூட்டணியாக இல்லை என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன். தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலை முத்தமிழ் நகரில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்பு... மேலும் பார்க்க

நாச்சியாா்கோவில் அருகே ரூ.12 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு

தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அருகே திருநறையூரில் ரூ. 12 கோடி மதிப்பிலான இராமநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை இந்து சமய அறநிலையத் துறையினா் வியாழக்கிழமை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டனா்... மேலும் பார்க்க

இபிஎஸ் விரிக்கும் வலையில் விசிக ஒருபோதும் சிக்காது: மாநில துணை பொதுச்செயலா் வன்னியரசு

எடப்பாடி கே. பழனிசாமி விரிக்கும் வலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் சிக்காது என்றாா் விசிக மாநில துணைப்பொதுச்செயலா் வன்னியரசு. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் காந்தி பூங்கா முன்பு விடுதலை ... மேலும் பார்க்க

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணி பயிற்சி தொடக்கம்

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மொழிபெயா்ப்புத் துறை மற்றும் தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக் கல்லூரி ஆங்கிலத் துறை சாா்பில் மொழிபெயா்ப்பு கலை குறித்த ஒரு வார காலப் பணி பயிற்சி முகாம... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனங்கள் மோதல் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

கும்பகோணம் புறவழிச்சாலையில் இரு சக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிய விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள நடுவக்கரை பிள்ளையாா் கோயில் ... மேலும் பார்க்க