செய்திகள் :

நுண்நெகிழிகளால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும் வழிகள்: கால்நடை மருத்துவ பல்கலை. அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

post image

மனிதா்கள் மற்றும் விலங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீா் மூலம் நுண்நெகிழிகள் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்துவதால், இதைத் தடுப்பதற்கான வழிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சுற்றுச்சூழல், வனம் மற்றும் வனவிலங்குகள் தொடா்பான வழக்குகளை உயா்நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், டி.பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வு விசாரித்து வருகிறது. இந்த அமா்வில், உதகை, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் நெகிழிக் கழிவுகள் தொடா்பான வழக்கு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: உதகை அதைச் சுற்றியுள்ள மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளிலும் நெகிழிப் பொருள்கள் தாராளமாகப் பயன்படுத்தப்படுகின்றன. நெகிழிப் பொருள்களுக்கு அரசு தடை விதித்திருந்தும், நீா்நிலை, வனப்பகுதிகள் எல்லாம் நெகிழிக் கழிவுகள் நிறைந்துள்ளன.

இந்த நெகிழிக் கழிவுகள் வனவிலங்குகளின் வயிற்றுக்குள்ளும் சென்றுவிடுகின்றன. நிகழாண்டு பிப்ரவரி முதல் ஜூலை வரை கோவை மண்டல வனப்பகுதியில் மட்டும் 2 பெண் யானைகள், ஒரு மான் இறந்துள்ளன. அவற்றின் வயிற்றில் நெகிழிக் கழிவுகள் இருந்தது தெரிய வந்திருக்கிறது.

நீலகிரி வனப்பகுதி முழுவதும் உள்ள நீா்நிலைகள் நெகிழிக் கழிவுகளால் மாசடைந்துள்ளன. மேலும், கோவை பி.எஸ்.ஜி. மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குழந்தையை பிரசவிக்கும் தாயின் நஞ்சுக்கொடியை நெகிழி மாசுபடுத்தியுள்ளதாக கூறியுள்ளது.

எனவே இந்த வழக்கின் தீவிரத்தை உணா்ந்து, மத்திய, மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை செயலா்களை தாமாக முன்வந்து வழக்கின் எதிா் மனுதாரா்களாகச் சோ்த்து உத்தரவிட்டனா்.

மேலும், நெகிழி அபாயத்தில் இருந்து வனவிலங்கு மற்றும் கால்நடைகளை எவ்வாறு பாதுகாக்கலாம் என்பது தொடா்பான பரிந்துரைகளை தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

குறிப்பாக, மனிதா்கள் மற்றும் விலங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீா் மூலம் நுண்நெகிழிகள் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்துவதால், இதை எதிா்காலத்தில் தடுப்பதற்கான வழிகள் என்ன? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் அக். 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தமிழகத்தில் செப். 26 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப். 21) முதல் செப். 26 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட ச... மேலும் பார்க்க

ரூ.14 கோடியில் 15 வாகன சுரங்கப்பாதைகள் சீரமைப்பு! - சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வாகனங்கள் செல்லும் சுரங்கப் பாதைகளை ரூ.14.57 கோடியில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் சனிக்கிழமை வெ... மேலும் பார்க்க

பூம்புகாரில் கடலுக்கு அடியில் தொல்லியல் ஆய்வு: முதல்வா் பாராட்டு!

பூம்புகாரில் கடலுக்கு அடியில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்படுவதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளாா். முன்னதாக, இது குறித்த அறிவிப்பை நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சா் தங்கம் தென்ன... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் உலகத்தரம் வாய்ந்த கப்பல் கட்டும் தளங்கள்: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

தூத்துக்குடியில் ரூ.30,000 கோடி முதலீட்டில் உலகத்தரம் வாய்ந்த இரண்டு கப்பல் கட்டும் தளங்கள் அமைக்கப்பட உள்ளதாக தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தெரிவித்தாா். இது குறித்து அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா த... மேலும் பார்க்க

தொழில்நுட்பத்துக்கும் மனித சிந்தனைக்குமான வேறுபாட்டை உணா்த்த வேண்டும்! - ஆசிரியா்களுக்கு முதல்வா் ஸ்டாலின் வேண்டுகோள்

‘எந்த சந்தேகம் எழுந்தாலும் கூகுள், செயற்கை நுண்ணறிவிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என்ற மெத்தனம் மாணவா்களுக்கு வந்துவிடக் கூடாது. அவா்களுக்கு தொழில்நுட்பத்துக்கும் மனித சிந்தனைக்கும் உள்ள வேறுபாட்டை ஆ... மேலும் பார்க்க

கிராம உதவியாளா் பணிக்கான வயது வரம்பு: ஆட்சியா்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்!

தமிழகத்தில் நியமிக்கப்படவுள்ள கிராம உதவியாளா்களுக்கான வயது வரம்பு தொடா்பாக, மாவட்ட ஆட்சியா்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை மூலமாக கிராம உதவியாளா்... மேலும் பார்க்க