செய்திகள் :

நெருங்கும் ரமலான் பண்டிகை: சென்னையில் களைகட்டாத ஆட்டுச் சந்தை!

post image

சென்னை: முஸ்லிம் மக்களால் கொண்டாடப்படும் ரமலான் பண்டிகையையொட்டி சென்னை சந்தைகளுக்கு ஆடுகளை விற்பனை செய்ய வந்த வியாபாரிகள் கடுமையான ஏமாற்றம் அடைந்தனர்.

ரமலான் பண்டிகையை ஒட்டி, சென்னையை அடுத்த செங்குன்றம், புழல், வியாசர்பாடி, ராயப்பேட்டை, பூந்தமல்லி, மதுரவாயல், திருமுல்லைவாயில் என பல்வேறு இடங்களுக்குமானதாக சென்னையில் மட்டும் மாதவரம் பகுதியில் உள்ளது முக்கிய சந்தை.

ஆனால், ஒரு சில நாள்களே உள்ள நிலையில், தற்போது வரை சுமார் 3,000 ஆடுகள் மட்டுமே விற்பனையாகியிருப்பதாகவும், 30,000க்கும் மேற்பட்ட ஆடுகளை பல்வேறு மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் கொண்டு வந்து இங்கு விற்பனைக்கு வைத்திருக்கும் நிலையில், வெள்ளிக்கிழமை மதியம் வரை விற்பனை களைகட்டவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

இந்த முக்கிய ஆட்டுச் சந்தைகளில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெறும், 5 கோடி ரூபாய்க்கு மேல் வியாபாரம் நடக்கும் என நினைத்து வந்த வியாபாரிகள் இந்த சந்தையில் தற்போதுவரை விற்பனை மிகவும் மந்தமான முறையில் நடந்து வருவதால் ஆட்டுச் சந்தைக்கு வந்திருக்கம் வியாபாரிகள் மன குமுறலுடன் இருக்கிறார்கள்.

குறிப்பாக உத்தரப் பிரதேசம், பிகார், மகாராஷ்டிரம் ஆகிய பல்வேறு மாநிலங்களில் இருந்து லாரிகள் மூலமாக வியாபாரம் செய்ய சென்னைக்கு வந்திருக்கக் கூடிய வியாபாரிகள், இதுவரை விற்பனை சூடுபிடிக்காமல் இருப்பதற்கான காரணங்களையும் ஆராய்ந்து வருகிறார்கள். வெயில் காரணமாக இருக்கலாம், அல்லது வார இறுதி நாள்களில் விற்பனை சூடுபிடிக்க வாய்ப்பிருக்கலாம் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

இஸ்லாமியர்களின் முக்கிய ரமலான் பண்டிகைக்காக இன்று மட்டும் 80 லட்சம் ரூபாய் மட்டுமே தற்போது வரை ஆடுகள் விற்பனை நடந்துள்ளதாக வியாபாரிகள் மனவேதனை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீா்நிலை சீரமைப்பு: இளைஞா்களுக்கு முதல்வா் வேண்டுகோள்

நீா்நிலை சீரமைப்புப் பணியில் இளைஞா்கள் ஈடுபட வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இது குறித்து எக்ஸ் தளத்தில் அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு: இளம் வயதிலேயே பொதுச் சிந்தன... மேலும் பார்க்க

பிரதமர் வருகை: ஏப். 4 - 6 வரை மீன்பிடிக்கத் தடை

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி ஏப். 4 - 6ஆம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க ஏப். 6ஆம் தேதி பிரதமர் மோடி, ராமேஸ்வரம் வருவதையொ... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு 4 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் பார்க்க

டாஸ்மாக்: அரசின் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் -அமலாக்கத்துறை

டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் மாா்ச் 6 முதல் 8 வரை சோதனை நடத்திய அமலாக்கத் துறை, ... மேலும் பார்க்க

ஏப்.3 முதல் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில்?

தமிழகத்தில் ஏப்ரல் 3 முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில், அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: தென்மேற்கு ... மேலும் பார்க்க

தமிழகத்தில் 62 பொருள்களுக்கு புவிசார் குறியீடு! தஞ்சை சாதனை: சஞ்சய் காந்தி

தஞ்சாவூர்: தமிழகத்தில் இதுவரை 62 பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அதில் தஞ்சை மாவட்டம் சாதனை படைத்திருப்பதாகவும் வழக்குரைஞர் சஞ்சய் காந்தி கூறியுள்ளார்.கும்பகோணம் வெற்றிலை, க... மேலும் பார்க்க