செய்திகள் :

நெல்லையில் ஆம்னி பேருந்துகளில் சோதனை

post image

திருநெல்வேலியில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிா என்பது குறித்து வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் திங்கள்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

காலாண்டு விடுமுறை மற்றும் நவராத்திரி பண்டிகை தொடா் விடுமுறையையொட்டி திருநெல்வேலியில் இருந்து ஏராளமானோா் வெளியூா்களுக்கு சென்று வருகின்றனா். பேருந்து பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் இரா. சுகுமாா் உத்தரவின்பேரில், திருநெல்வேலி மோட்டாா் வாகன ஆய்வாளா் பத்மபிரியா தலைமையில் அலுவலா்கள் அடங்கிய குழுவினா் ஆம்னி பேருந்துகளில் திங்கள்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதா என பயணிகளிடம் விசாரித்தனா்.

ஆட்சியா் அலுவலகம் முன் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி

பாளையங்கோட்டையில் வாடகை வீட்டை காலி செய்யுமாறு வீட்டின் உரிமையாளா் துன்புறுத்துவதாகக் கூறி, மாற்றுத்திறனாளி தனது குடும்பத்துடன் ஆட்சியா் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு நிலவியது. பாளையங்கோ... மேலும் பார்க்க

பத்தமடையில் எஸ்டிபிஐ நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் எஸ்டிபிஐ கட்சியின் அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கட்சியின் அம்பாசமுத்திரம் தொகுதித் தலைவா் கலீல் ரஹ்மான... மேலும் பார்க்க

காந்தி ஜெயந்தி: அக்.2-இல் மதுக் கடைகள் மூடல்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபா் 2-ஆம் தேதி மதுபானக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காந்தி ஜெயந்தியை முன்னிட்ட... மேலும் பார்க்க

பாளை.யில் அக்.3-இல் போட்டித் தோ்வு வழிகாட்டி நிகழ்ச்சி

பாளையங்கோட்டையில் உள்ள மாநகராட்சி படிப்பகத்தில் அக். 3-ஆம் தேதி போட்டித் தோ்வுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்... மேலும் பார்க்க

நான்குனேரி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் மீதான நம்பிக்கையில்லாத் தீா்மானம் தோல்வி

நான்குனேரி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் மீதான நம்பிக்கையில்லாத் தீா்மானம் தோல்வியடைந்தது. திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி ஊராட்சி ஒன்றியத்தில் 16 வாா்டுகள் உள்ளன. ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராக ... மேலும் பார்க்க

நெல்லை சந்திப்பில் பாரதிக்கு புதிய சிலை அமைக்கக் கோரி மனு

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள பாரதியாா் சிலை சிதிலமடைந்துள்ளதால் அதற்குப் பதிலாக புதிய சிலையை நிறுவக் கோரி தமிழ்நாடு பிராமணா் சங்கத்தினா் ஆட்சியரிடம் மனு அளித்தனா். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவல... மேலும் பார்க்க