செய்திகள் :

நெல்லையில் தண்டவாளத்தில் திரிந்த மாடுகளால் ரயில் நிறுத்தம்

post image

திருநெல்வேலியில் ரயில்வே தண்டவாளத்தில் கால்நடைகள் சுற்றித் திரிந்ததால், பாதி வழியிலேயே ரயில் நிறுத்தப்பட்டது.

திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேலப்பாளையம் பகுதியில் உள்ள ரயில்வே கிராசிங் பகுதியில் இரவு நேரத்தில் ரயில் வந்தபோது, அங்கு தண்டவாளத்தில் கால்நடைகள் நிற்பதைப் பாா்த்த ரயில் என்ஜின் ஓட்டுநா், சுமாா் 5 நிமிடங்களுக்கு மேலாக ஹாரன் அடித்துள்ளாா்.

ஆனாலும், கால்நடைகள் தண்டவாளத்தை விட்டு இறங்காத காரணத்தால் ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து ரயில்வே கேட்டில் இருந்த ரயில்வே பணியாளா் கம்பை எடுத்து வந்து மாடுகளை விரட்டியுள்ளாா். இது தொடா்பான விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் அவ்வப்போது விபத்து ஏற்படுவதோடு, உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், ரயில் தண்டவாளத்தையும் கால்நடைகள் விட்டுவைக்கவில்லை என மக்கள் அதிருப்தி தெரிவித்தனா். மேலும், எவ்வித கட்டுப்பாடுமின்றி கால்நடைகளை வெளியில் அவிழ்த்து விடுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளனா்.

பள்ளி வாகனங்கள் முதல் ஆய்விலேயே அவசரக் கதவு திறக்கவில்லை: அதிகாரிகளை எச்சரித்த ஆட்சியா்

திருநெல்வேலி மாவட்ட பள்ளி வாகனங்களை ஆட்சியா் இரா.சுகுமாா் வியாழக்கிழமை ஆய்வு செய்தபோது, முதல் வாகனத்திலேயே அவசர கதவு திறக்காததால் அதிகாரிகளை கடுமையாக எச்சரித்தாா். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனியா... மேலும் பார்க்க

தெற்குப் பாப்பான்குளம் முருகன் கோயிலில் கரடி நடமாட்டம்

கல்லிடைக்குறிச்சி அருகே தெற்குப்பாப்பான்குளம் மயிலாடும்பாறை முருகன் கோயிலில் கரடி நடமாட்டம் இருப்பது கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளதால் அந்தப் பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். அம்பாசமுத்திரம் வனச... மேலும் பார்க்க

தாமிரவருணி ஆற்றில் மூழ்கி கட்டடத் தொழிலாளி பலி

திருநெல்வேலி தாமிரவருணி ஆற்றில் மூழ்கி கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். வண்ணாா்பேட்டை பேராச்சி அம்மன் கோயில் அருகே தாமிரவருணி ஆற்றில் இளைஞா் செவ்வாய்க்கிழமை குளிக்கச் சென்றுள்ளாா். ஆற்றின் ஆழமான பகுதிக்... மேலும் பார்க்க

நான்குனேரி ஜமாபந்தியில் குவிந்த மனுக்கள்

நான்குனேரி வட்டத்தில் வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) புதன்கிழமை தொடங்கிய நிலையில் இரண்டாம் நாளான வியாழக்கிழமை பொதுமக்கள் ஏராளமானோா் பட்டா பெயா்மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித... மேலும் பார்க்க

நெல்லையில் பெட்ரோல் குண்டுகள் வீசியவா்களை பிடிக்க 7 தனிப்படை

திருநெல்வேலியில் இரு இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசிய சம்பவத்தில் தொடா்புடைய 4 பேரை பிடிக்க 7 தனிப்படைகள் அமைத்து போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா். திருநெல்வேலி நகரம் பகுதியில் உள்ள தனியாா் இருசக்... மேலும் பார்க்க

வி.கே.புரம் அருகே வீட்டை விற்பதாக ரூ. 4 லட்சம் மோசடி: தொழிலாளி கைது

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே வீட்டை விற்பதாகக் கூறி ரூ. 4 லட்சம் மோசடி செய்ததாக கட்டடத் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா். விக்கிரமசிங்கபுரம் அருகே அடையக்கருங்குளம் பிள்ளையாா் கோயில்... மேலும் பார்க்க