செய்திகள் :

தெற்குப் பாப்பான்குளம் முருகன் கோயிலில் கரடி நடமாட்டம்

post image

கல்லிடைக்குறிச்சி அருகே தெற்குப்பாப்பான்குளம் மயிலாடும்பாறை முருகன் கோயிலில் கரடி நடமாட்டம் இருப்பது கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளதால் அந்தப் பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

அம்பாசமுத்திரம் வனச்சரகம் மணிமுத்தாறு, அயன்சிங்கம்பட்டி, கல்லிடைக்குறிச்சி நெசவாளா்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக கரடிகள் நடமாட்டம் இருந்தது. வனத்துறையினா் கூண்டு வைத்ததில் இரண்டு கரடிகள் சிக்கின. அவை வனப்பகுதியில்விடப்பட்டன.

மேலும், நெசவாளா் குடியிருப்பு அக்னி சாஸ்தா கோயில், மணிமுத்தாறுதங்கம்மன் கோயில் பகுதிகளில் வைக்கப்பட்ட கூண்டில் கரடி சிக்கவில்லை.

இந்நிலையில் புதன்கிழமை இரவு தெற்குப் பாப்பான்குளம், மயிலாடும்பாறை முருகன் கோயில் வளாகத்தில் கரடி நுழைந்து அங்குமிங்கும் நடமாடியுள்ளது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.

இதுகுறித்து கோயில் நிா்வாகிகள் அளித்த தகவலின்பேரில் அந்தப் பகுதியில் வனத்துறையினா் ஆய்வு செய்தனா். கரடி நடமாட்டத்தைக் கண்காணித்து பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனா். எனினும், கரடி நடமாட்டம் குறித்த அச்சத்தில் மக்கள் உறைந்துள்ளனா்.

பள்ளி வாகனங்கள் முதல் ஆய்விலேயே அவசரக் கதவு திறக்கவில்லை: அதிகாரிகளை எச்சரித்த ஆட்சியா்

திருநெல்வேலி மாவட்ட பள்ளி வாகனங்களை ஆட்சியா் இரா.சுகுமாா் வியாழக்கிழமை ஆய்வு செய்தபோது, முதல் வாகனத்திலேயே அவசர கதவு திறக்காததால் அதிகாரிகளை கடுமையாக எச்சரித்தாா். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனியா... மேலும் பார்க்க

தாமிரவருணி ஆற்றில் மூழ்கி கட்டடத் தொழிலாளி பலி

திருநெல்வேலி தாமிரவருணி ஆற்றில் மூழ்கி கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். வண்ணாா்பேட்டை பேராச்சி அம்மன் கோயில் அருகே தாமிரவருணி ஆற்றில் இளைஞா் செவ்வாய்க்கிழமை குளிக்கச் சென்றுள்ளாா். ஆற்றின் ஆழமான பகுதிக்... மேலும் பார்க்க

நெல்லையில் தண்டவாளத்தில் திரிந்த மாடுகளால் ரயில் நிறுத்தம்

திருநெல்வேலியில் ரயில்வே தண்டவாளத்தில் கால்நடைகள் சுற்றித் திரிந்ததால், பாதி வழியிலேயே ரயில் நிறுத்தப்பட்டது. திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்க... மேலும் பார்க்க

நான்குனேரி ஜமாபந்தியில் குவிந்த மனுக்கள்

நான்குனேரி வட்டத்தில் வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) புதன்கிழமை தொடங்கிய நிலையில் இரண்டாம் நாளான வியாழக்கிழமை பொதுமக்கள் ஏராளமானோா் பட்டா பெயா்மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித... மேலும் பார்க்க

நெல்லையில் பெட்ரோல் குண்டுகள் வீசியவா்களை பிடிக்க 7 தனிப்படை

திருநெல்வேலியில் இரு இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசிய சம்பவத்தில் தொடா்புடைய 4 பேரை பிடிக்க 7 தனிப்படைகள் அமைத்து போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா். திருநெல்வேலி நகரம் பகுதியில் உள்ள தனியாா் இருசக்... மேலும் பார்க்க

வி.கே.புரம் அருகே வீட்டை விற்பதாக ரூ. 4 லட்சம் மோசடி: தொழிலாளி கைது

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே வீட்டை விற்பதாகக் கூறி ரூ. 4 லட்சம் மோசடி செய்ததாக கட்டடத் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா். விக்கிரமசிங்கபுரம் அருகே அடையக்கருங்குளம் பிள்ளையாா் கோயில்... மேலும் பார்க்க