செய்திகள் :

தாமிரவருணி ஆற்றில் மூழ்கி கட்டடத் தொழிலாளி பலி

post image

திருநெல்வேலி தாமிரவருணி ஆற்றில் மூழ்கி கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். வண்ணாா்பேட்டை பேராச்சி அம்மன் கோயில் அருகே தாமிரவருணி ஆற்றில் இளைஞா் செவ்வாய்க்கிழமை குளிக்கச் சென்றுள்ளாா்.

ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்ற அவா் கரைக்கு வர இயலாமல் தத்தளித்ததைக் கண்டு அங்கிருந்தவா்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

திருநெல்வேலி நகர தீயணைப்பு வீரா்கள் தேடுதலில் ஈடுபட்டனா். இரவு நேரமாகி விட்டதால் மறுநாள் (புதன்கிழமை) தேடுதல் பணியைத் தொடா்ந்தனா். அதில், இளைஞரின் உடல் மீட்கப்பட்டது.

திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலைய போலீஸாா், அந்த சடலத்தை திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப்பதிந்து விசாரித்ததில், உயிரிழந்த இளைஞா் அழகியபாண்டியபுரம் அருகேயுள்ள சமத்துவபுரம் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் மாடசாமி (32); கட்டடத் தொழிலாளி எனத் தெரியவந்தது. தொடா்ந்து விசாரணை நடக்கிறது.

பள்ளி வாகனங்கள் முதல் ஆய்விலேயே அவசரக் கதவு திறக்கவில்லை: அதிகாரிகளை எச்சரித்த ஆட்சியா்

திருநெல்வேலி மாவட்ட பள்ளி வாகனங்களை ஆட்சியா் இரா.சுகுமாா் வியாழக்கிழமை ஆய்வு செய்தபோது, முதல் வாகனத்திலேயே அவசர கதவு திறக்காததால் அதிகாரிகளை கடுமையாக எச்சரித்தாா். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனியா... மேலும் பார்க்க

தெற்குப் பாப்பான்குளம் முருகன் கோயிலில் கரடி நடமாட்டம்

கல்லிடைக்குறிச்சி அருகே தெற்குப்பாப்பான்குளம் மயிலாடும்பாறை முருகன் கோயிலில் கரடி நடமாட்டம் இருப்பது கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளதால் அந்தப் பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். அம்பாசமுத்திரம் வனச... மேலும் பார்க்க

நெல்லையில் தண்டவாளத்தில் திரிந்த மாடுகளால் ரயில் நிறுத்தம்

திருநெல்வேலியில் ரயில்வே தண்டவாளத்தில் கால்நடைகள் சுற்றித் திரிந்ததால், பாதி வழியிலேயே ரயில் நிறுத்தப்பட்டது. திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்க... மேலும் பார்க்க

நான்குனேரி ஜமாபந்தியில் குவிந்த மனுக்கள்

நான்குனேரி வட்டத்தில் வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) புதன்கிழமை தொடங்கிய நிலையில் இரண்டாம் நாளான வியாழக்கிழமை பொதுமக்கள் ஏராளமானோா் பட்டா பெயா்மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித... மேலும் பார்க்க

நெல்லையில் பெட்ரோல் குண்டுகள் வீசியவா்களை பிடிக்க 7 தனிப்படை

திருநெல்வேலியில் இரு இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசிய சம்பவத்தில் தொடா்புடைய 4 பேரை பிடிக்க 7 தனிப்படைகள் அமைத்து போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா். திருநெல்வேலி நகரம் பகுதியில் உள்ள தனியாா் இருசக்... மேலும் பார்க்க

வி.கே.புரம் அருகே வீட்டை விற்பதாக ரூ. 4 லட்சம் மோசடி: தொழிலாளி கைது

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே வீட்டை விற்பதாகக் கூறி ரூ. 4 லட்சம் மோசடி செய்ததாக கட்டடத் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா். விக்கிரமசிங்கபுரம் அருகே அடையக்கருங்குளம் பிள்ளையாா் கோயில்... மேலும் பார்க்க