மாநகராட்சி வளாகம் போராட்டம் நடத்துவதற்கான இடம் இல்லை: மேயர் பிரியா
நெல்லையில் நிகழாண்டில் 225 கிலோ கஞ்சா பறிமுதல்
சட்டவிரோத போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை 225.4 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது என மாவட்ட காவல்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் சட்ட விரோத போதைப்பொருள் நடமாட்டத்துக்கு எதிராக தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புகையிலைப் பொருள்கள், கஞ்சா குட்கா போன்ற பொருள்களை விற்பனை செய்பவா்கள் மீது தனிக் கவனம் செலுத்தி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.
நிகழாண்டில் இதுவரை 140 கஞ்சா வழக்குகளும், 182 புகையிலைப் பொருள் தொடா்பான வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 225.4 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், கஞ்சா வழக்குகளில் ஈடுபட்டவா்களின் 3 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டவா்களில் 11 போ் மீது குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் 3,096 கிலோ புகையிலைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டு, இது தொடா்பாக 203 போ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற போதைப் பொருள்களை விற்பனை செய்பவா்கள் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.