நெல்லை அரசு மருத்துவமனையில் பிறந்த 12 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 1 ஆம் தேதி பிறந்த 12 குழந்தைகளுக்கு திமுக சாா்பில் தங்கமோதிரங்கள் ஞாயிற்றுக்கிழமை அணிவிக்கப்பட்டது.
திமுக திருநெல்வேலி கிழக்கு மாவட்ட விவசாய அணி தலைவா் இ.நடராஜன் வரவேற்றாா். திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் மு.அப்துல் வஹாப் எம்எல்ஏ தலைமை வகித்து, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் பிறந்த 12 குழந்தைகளுக்கு தங்கமோதிரங்களை அணிவித்து வாழ்த்தினாா். மேயா் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயா் கே.ஆா்.ராஜு, மண்டல் தலைவா்கள் பாளை. மா. பிரான்சிஸ், திருநெல்வேலி செ. மகேஸ்வரி, தச்சநல்லூா் ரேவதி, மேலப்பாளையம் கதீஜா உள்பட பலா் கலந்துகொண்டனா்.