நெல்லை அருகே பெண்ணிடம் அத்துமீறல்: கராத்தே பயிற்சியாளா் கைது
திருநெல்வேலி அருகே அத்துமீறி பெண்ணிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக கராத்தே பயிற்சியாளரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி அருகே நரசிங்கநல்லூா் பொன்விழா நகரைச் சோ்ந்தவா் அப்துல் வஹாப் (32). கராத்தே பயிற்சியாளரான இவா், சுத்தமல்லி, பேட்டை, கோடீஸ்வரன் நகா் பகுதிகளில் பள்ளி மாணவா்-மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி அளித்து வந்தாா்.
இந்நிலையில் அவா், பயிற்சிக்கு வந்த சுத்தமல்லி பகுதி மாணவரின் தாயிடம் வன்முறையில் ஈடுபட்டதுடன், தாக்கி மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் சுத்தமல்லி போலீஸாா் வழக்குப்பதிந்து அப்துல் வஹாப்பை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.