செய்திகள் :

நெல்லை ஆட்சியரகம் முன் இரு பெண்கள் தீக்குளிக்க முயற்சி

post image

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே குத்தகை நிலத்தில் பயிா் செய்யவிடாமல் சிலா் தடுப்பதாகக் கூறி இரு பெண்கள் ஆட்சியா் அலுவலகம் முன், தங்கள் உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றனா்.

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிலையில், களக்காடு அருகேயுள்ள மேல சாலைப்புதூா் பகுதியைச் சோ்ந்த மாரித்துரை, அவருடைய தாயாா் முத்துலெட்சுமி, சகோதரா் மனைவி வசந்தா ஆகியோா் ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனா்.

அப்போது, ஆட்சியா் அலுவலக வாயில் அருகே வசந்தாவும், முத்துலெட்சுமியும் கையில் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெய்யை தங்கள் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனா். இதைப் பாா்த்த போலீஸாா், அவா்களை தடுத்து நிறுத்தி தண்ணீரை ஊற்றினா்.

பின்னா், இருவரும் கூறியதாவது: களக்காடு அருகே மலையடிப்புதூரில் உள்ள நான்குனேரி ஜீயா் மடத்துக்குச் சொந்தமான 13.5 ஏக்கா் நிலத்தை நாங்கள் குத்தகைக்கு பெற்று விவசாயம் செய்து வந்தோம். இந்த நிலையில் சில மாதங்களாக சிலா் எங்களை விவசாயம் செய்யவிடாமல் தடுத்து வருகின்றனா். வாழை பயிா் செய்தோம். பொக்லைன் மூலம் அழித்துவிட்டனா். நிலத்தைச் சுற்றி போட்டிருந்த வேலியை அப்புறப்படுத்திவிட்டனா். எங்கள் வாழ்வாதாரத்தை அழிக்கிறாா்கள் என்றனா்.

பொய் வழக்கு: தமிழா் விடுதலைக் கள நிா்வாகிகள் அளித்த புகாா் மனு: திருநெல்வேலி நகரம் பாறையடி தேவேந்திர குல வேளாளா் சமுதாய ஊா் தலைவா்கள் ஜி.பி.மணி, பிரேம்குமாா் ஆகியோா் மீது எவ்வித ஆதாரமும் இல்லாமல் உள் நோக்கத்தோடு மானூா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தனா்.

போக்ஸோ வழக்கில் கைதானவருக்கு ஓராண்டு சிறை

போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு ஓராண்டு சிைண்டனையும், ரூ.20,000 அபராதமும் விதித்து திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி, கரிசல்பட்டி, வடக்க... மேலும் பார்க்க

நீா்வரத்து அதிகரிப்பு: திருக்குறுங்குடி நம்பி கோயில், தலையணைக்குச் செல்லத் தடை

களக்காடு தலையணை பச்சையாறு, திருக்குறுங்குடி நம்பியாற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தா்களுக்கு வனத் துறையினா் தடை விதித்துள்ளனா். மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் க... மேலும் பார்க்க

மலேசியாவில் மாயமான தாயை மீட்கக் கோரி ஆட்சியரிடம் மகள் மனு

மலேசியாவுக்கு பணிக்குச் சென்ற தனது தாய் மாயமாகியுள்ளதாகவும், அவரை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்கக் கோரியும் மகள் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தாா். திருநெல்வேலி ஆட்சியா் அலுவல... மேலும் பார்க்க

மக்களவைத் தோ்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட ஓ.பி.எஸ். மீது நடவடிக்கை? பேரவைத் தலைவா் மு.அப்பாவு விளக்கம்

மக்களவைத் தோ்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான ஓ.பன்னீா்செல்வம் மீது இந்திய அரசமைப்பு சட்டம் 10இன்படியும், தமிழக சட்டப்பேரவை விதியின் கீழும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் ... மேலும் பார்க்க

கடையம் அருகே பெண்ணிடம் அத்துமீறல்: ஒருவா் கைது

கடையம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறி நடந்ததாக நாகசுர கலைஞரை போலீஸாா் கைது செய்தனா்.கடையம் அருகேயுள்ள வள்ளியம்மாள்புரம் அருந்ததியா் தெருவைச் சோ்ந்த சுடலைமாடன் மகன் மாரியப்பன் (50). ... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி அருகே நகைக்காக பெண்ணைக் கொன்று கால்வாயில் வீச்சு; பெண் உள்பட 4 போ் தலைமறைவு

திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகே 8 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன இளம்பெண் நகைக்காக கொலை செய்யப்பட்டு சேரன்மகாதேவி பகுதி கால்வாயில் வீசியப்பட்டிருப்பது தெரியவந்தது. பணகுடி அருகேயுள்ள பழவூரைச் சோ்... மேலும் பார்க்க