செய்திகள் :

``நெல்லை காங். தலைவர் கொலை வழக்கு; குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாதது வருத்தம்'' – செல்வப்பெருந்தகை

post image

நெல்லையில் காங்கிரஸ் மாநாடு

நெல்லையில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“வாக்குத் திருட்டை தடுப்போம், வாக்கு அதிகாரத்தை பெற்றுக் கொடுப்போம் என்ற தலைப்பில் வரும் 7-ம் தேதி நெல்லையில் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு ஒரு திருப்புமுனையாக அமையும்.

இதில் சுமார் 1 லட்சம் தொண்டர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் இருந்து மேலிடத் தலைவர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் பங்கேற்க உள்ளனர்.

ஆலோசனைக் கூட்டம்

பொறுப்பு டி.ஜி.பி

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியிலும் பொறுப்பு டி.ஜி.பிக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உத்திரப்பிரதேசத்திலும் 5 முறை பொறுப்பு டி.ஜி.பிக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, தமிழகத்தில் இது ஒன்றும் புதிதல்ல.

தமிழக முதல்வரின் வெளிநாட்டு பயணம்

தமிழக முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து வெள்ளை அறிக்கை கேட்கும் அ.தி.மு.க., மக்களவை கூட்டத் தொடரும் போது, வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடியிடம் வெள்ளை அறிக்கையை வெளியிட கேட்கட்டும்.

காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கு

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கில் ஓராண்டாக கடந்தும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாதது வருத்தமளிக்கிறது. ஆனால், தமிழ்நாடு காவல்துறையின் மீது நம்பிக்கை உள்ளது. விரைவில் சரியான குற்றவாளிகள் கைது செய்யப்படுவர்.

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

இந்தியா கூட்டணி

இந்தியா கூட்டணி வலிமையாகவும் இணக்கமாகவும் உள்ளது. ஏற்கெனவே ஐந்து முறை வெற்றி கண்டுள்ளது. தற்போதைய தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கங்களான பா.ம.க., தே.மு.தி.க., ஓ.பிஸ் போன்றோர் வெளியேறியுள்ளனர்.

ஆனால், இந்தியா கூட்டணியின் பலம் குறையவில்லை. ஜி.கே. மூப்பனார் ஒரு போதும் பா.ஜ.கவை ஆதரித்ததில்லை. அவரது ஆன்மாவும் பா.ஜ.கவை மன்னிக்காது,” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

`பாகிஸ்தானுடன் குடும்ப வணிகத்துக்காக இந்தியாவைத் தூக்கி எறிந்த ட்ரம்ப்' -முன்னாள் NSA குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகரும், வழக்கறிஞருமான ஜேக் சலிவன், அதிபர் ட்ரம்ப் பாகிஸ்தானுடனான தனது குடும்பத்தின் வணிக நன்மைக்காக இந்தியாவுடனான உறவை தூக்கி எறிகிறார் என்று விமர்சித்துள்ளார்.ஜோ ... மேலும் பார்க்க

``அரசியலில் தொடர்பு இல்லாத என் அம்மாவை காங்கிரஸ், ஆர்.ஜே.டி அவமதித்தது ஏன்? - பிரதமர் மோடி வேதனை

ஆர்.ஜே.டி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தனது தாயை அவமதித்துவிட்டதாக பிரதமர் மோடி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.பீஹாரில் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.தர்பங்காவில... மேலும் பார்க்க

TTV Dhinakaran: ஓரங்கட்டும் NDA; விஜய்க்கு சிக்னல் கொடுக்கும் டிடிவி! - தினகரனின் ப்ளான் என்ன?

ஆதரவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம், முதல்வருடன் சந்திப்பு, மதுரையில் மாநாடு அறிவிப்பு என பரபரப்பு கிளப்பி வந்த ஓ.பி.எஸ் இப்போது கொஞ்சம் அமைதியாகியிருக்கிறார்.ஓ.பி.எஸ் விட்ட இடத்திலிருந்து டிடிவி தினகரன் ... மேலும் பார்க்க

US: ``இந்தியா இங்கே நிறைய விற்கிறது; அமெரிக்காவால் இந்தியாவில் விற்க முடியவில்லை'' -ட்ரம்ப் காட்டம்

ரஷ்யாவுடனான எண்ணெய் வர்த்தக காரணமாக, இந்தியப் பொருள்கள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்த 50 சதவீத வரி சில நாள்களுக்கு முன்பு நடைமுறைக்கு வந்தது.இவ்வாறிருக்கும் நிலையில், சீனாவில் நடைபெற்ற... மேலும் பார்க்க

``பொருளாதார சுயநல சவால்களை தாண்டி, இந்தியா 7.8% வளர்ச்சி'' - ட்ரம்பிற்கு மோடி மறைமுகக் குட்டு

இந்தியா மீது 50 சதவிகித வரி விதித்து, இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு நெருக்கடியை உண்டாக்கி இருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.இதற்கு முன்னர், ட்ரம்ப் இந்தியா மற்றும் ரஷ்யாவை 'இறந்த பொருளாதாரங்கள்' என்று... மேலும் பார்க்க

``டிடிவி தினகரன் எங்களுடன்தான் இருக்கிறார்; யாருக்கும் சந்தேகம் தேவையில்லை'' - நயினார் நாகேந்திரன்

தேசிய ஜனநாயகக் கூட்டணிநெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க. தலைவர் நயினர் நாகேந்திரன்,"அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எங்க... மேலும் பார்க்க